Advertisment

2024 தேர்தல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் ‘INDIA’; இந்திய தேசிய வளர்ச்சி ஒருங்கிணைந்த கூட்டணி

2024 மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்தியா’ ( INDIA - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
opposition meeting in bengaluru, oppn alliance, bengaluru, karnataka, lok sabha polls, 2024 polls, 2024 தேர்தல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் இந்தியா, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி, congress, tmc, sonia gandhi, mamata banerjee, AAP, DMK, RJD, indian express news, indian National Developmental Inclusive Alliance

2024 தேர்தல் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெயர் ‘INDIA’; இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி

பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற த்தசில வாரங்களுக்குப் பிறகு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்தியா’ ( INDIA - இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisment

2024 மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ) எதிர்கொள்ள, நாடு முழுவதும் உள்ள, 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள், பெங்களூருவில், செவ்வாய்க்கிழமை கூடி ஆலோசனை நடத்தியதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைத்த ஆவணத்தின்படி, “அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான” 26 கட்சிகளின் தீர்மானத்தைக் குறிப்பிடுகிறது. “இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் சிதைக்கப்படுகின்றன” என்று அந்த ஆவணம் கூறுகிறது.

அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க அரசு “மத்திய முகமைகளை தவறாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் தேவைகளை புறக்கணிக்கிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது. மேலும், மணிப்பூரில் மனிதாபிமான துயரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போதும் உயர்ந்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

“சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களிடமும் நியாயமான முறையில் கோரிக்கைகளை கேட்பது, முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்” என, ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தனித்தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ டெல்லி மற்றும் 10 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம் (காமராவாடி), ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), கேரள காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திலோ அல்லது பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று கூறினார். மேலும், அவர் கூறினார், “மாநில அளவில் எங்களில் சிலருக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நாங்கள் அறிவோம்; இவை கருத்தியல் சார்ந்தவை அல்ல என்றும், மக்களின் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு அவை பெரிய விஷயங்கள் இல்லை என்றும் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே மேலும் கூறுகையில், நாங்கள் 26 கட்சிகள், 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பா.ஜ.க தனித்து 303 இடங்களைப் பெறவில்லை, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பயன்படுத்திக்கொண்டு அவற்றை நிராகரித்தது. இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அந்த கட்சித் தலைவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் ஓடி பழைய கூட்டாளிகளுடன் ஒட்டுப்போடுகிறார்கள்” என்றார். மேலும், எதிர்க்கட்சிகள் கூட்டம் அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்டது என்று கூறினார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் செவ்வாய்க்கிழமை தொடங்கினார். பெங்களூருவில் நடந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ‘தீவிரமான ஊழல் மாநாடு’ என்று அழைத்தார். இந்த வாரிசு கட்சிகள் ‘குடும்பம் மற்றும் குடும்பத்திற்காக’ என்ற முழக்கத்தைப் பின்பற்றுகின்றன என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment