காஷ்மீரின் எல்லையில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில், அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலில் நவ்சேரா பகுதியில், பொது மக்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
எனவே, பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா மற்றும் மன்ஜகோட் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.