Advertisment

தேர்தல் ஆணையக் குழு தேர்வு மசோதாவை அறிமுகம் செய்யும் மத்திய அரசு; குழுவில் தலைமை நீதிபதி இல்லை

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு, தலைமை தேர்தல் ஆணையர் (சி.இ.சி) மற்றும் தேர்தல் ஆணையர்கள் குழுவினரைத் தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
parliament, monsoon session, parliament news, chief justice of india, தேர்தல் ஆணைய குழுவை தேர்வு செய்யும் மசோதாவை அறிமுகம் செய்யும் மத்திய அரசு, குழுவில் தலைமை நீதிபதி இல்லை, மத்திய சட்ட அமைச்சகம், india law ministry, arun goel, eci, election commission of india, india news, todays news

தேர்தல் ஆணைய குழுவை தேர்வு செய்யும் மசோதாவை அறிமுகம் செய்யும் மத்திய அரசு; குழுவில் தலைமை நீதிபதி இல்லை

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு, தலைமை தேர்தல் ஆணையர் (சி.இ.சி) மற்றும் தேர்தல் ஆணையர்கள் குழுவினரைத் தேர்வு செய்யும் என உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

Advertisment

இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சர் அடங்கிய குழுவை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சர் அடங்கிய குழுவை அமைப்பதற்கான மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அன்றைய தினத்திற்கான திருத்தப்பட்ட மசோதா பட்டியலில், தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் (இ.சி) நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த மசோதா தேர்தல் ஆணையத்தின் பணி மாற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்கான நடைமுறைகள் தொடர்பானது.

மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட உயர் அதிகாரக் குழு 3 பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தை தேர்ந்தெடுக்கும் என்று தீர்ப்பளித்தது. தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை இது பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவைக்கான நியமன நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023, அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளபடி, இந்திய தேர்தல் ஆணையமானது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் செயலருக்கு நிகரான பதவியை வகிக்கும் நபர்களிடமிருந்து ஒரு தலைமை தேர்தல் ஆணைய மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு தேர்தல் மேலாண்மை மற்றும் தேர்தல் நடத்துவதில் அறிவும் அனுபவமும் கொண்ட நேர்மையான நபர்களாக இருக்க வேண்டும்.

முதலில் கேபினட் செயலாளரின் தலைமையில் ஒரு தேடல் குழு மற்றும் செயலாளர் பதவிக்குக் குறையாத இரண்டு உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் தொடர்பான விஷயங்களில் அறிவும் அனுபவமும் உள்ளவர்கள், ஐந்து பேர் கொண்ட குழுவைத் தயாரிக்க வேண்டும்". இது, பிரதமர் தலைமையிலான, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது லோக்சபாவில் உள்ள தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்படும்.

“தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களின் நியமனம் வெறும் காலியிடங்கள் காரணமாகவோ அல்லது தேர்வுக் குழுவின் அரசியலமைப்பில் ஏதேனும் குறைபாடுள்ள காரணத்தினாலோ செல்லாது” என்று மசோதா கூறுகிறது.

தேர்வுக் குழு அதன் நடைமுறையை வெளிப்படையான முறையில் ஒழுங்குபடுத்தும், மேலும் அது தேடல் குழுவின் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் பரிசீலிக்கலாம் என்று மசோதா கூறுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் அல்லது அவர்கள் 65 வயதை எட்டும் வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரைக்கும் பதவிக் காலம் இது மாறாமல் இருக்கும். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் சம்பளம் கேபினட் செயலாளரின் சம்பளமாக இருக்கும்.

கடந்த வாரம், தேர்தல் ஆணையர் அருண் கோயலின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நவம்பர் 19, 2022-ல் அருண் கோயல் 37 வருட சேவைக்குப் பிறகு இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறத் தேர்ந்தெடுத்த ஒரு நாளுக்குப் பிறகு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

கனரக தொழில்துறையின் அப்போதைய செயலாளராக இருந்த அருண் கோயல், டிசம்பர் 31, 2022-ல் ஓய்வு பெறவிருந்தார். அவரது நியமனம் மே 15, 2022 முதல் இருந்த ஒரு காலியிடத்தை நிரப்பியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment