Advertisment

டெல்லி ‘கூல்’ ஆகிறது, தமிழக மீனவர்களுக்கும் வானிலை எச்சரிக்கை

பருவமழைக்கு முன்னால் பெய்யும் மழை காரணமாக காற்று மாசுபாடு கட்டுக்குள் வந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Southwest Monsoon

Southwest Monsoon

டெல்லியில் அடிக்கடி புழுதிக்காற்று மற்றும் மணல் புயல் உருவாவது வழக்கம். அதன் புவியியல் அமைப்பினால் அடிக்கடி காற்று மாசுபாடு அதிகரித்துவிடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெல்லி காற்றில் மாசின் அளவு மிகவும் அதிகமாக இருந்தது.

Advertisment

தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 29ல் தொடங்கியது. வெள்ளி(இன்று), தென்மேற்கு பருவமழை டெல்லியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே டெல்லியின் வெப்பநிலை சற்றும் குறையாமல் 45 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பருவமழை காற்று காரணமாகவும், பருவமழைக்கு முன்னால் பொழியும் மழை காரணமாகவும் காற்றில் இருக்கும் மாசுபாட்டின் அளவு குறைந்திருக்கின்றது. இன்று டெல்லியின் 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ மதிப்பு 83ஆக பதிவாகியது. பருவமழைக் காற்று காரணமாகவும், மழை காரணமாகவும் காற்றின் மாசுபாடு இன்னும் குறையும்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காற்றில் இருக்கும் மாசுக்களைப் பொறுத்து ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் மதிப்பினை கணக்கிடும். அதன் மதிப்பு 0-50ல் இருந்தால் காற்று மிகவும் சுத்தமாக இருக்கின்றது, சுவாசிக்க அதிக ஏற்புடையது. 51-100ல் இருந்தால் திருப்திகரமான அளவிற்கு காற்று சுத்தமாக இருக்கின்றது. 101-200 இருந்தால் காற்று மிதமான அளவிற்கு மாசடைந்திருக்கின்றது. 201-300 என்பது மோசமான நிலையில் மாசடைந்திருக்கின்றது என்றும், 301-400 என்பது மிகவும் மோசமான நிலையையும், 401-500 என்பது தீவிரமான நிலையில் காற்று மாசடைந்திருக்கின்றது என்றும் கணக்கில் கொள்ளப்படும். டெல்லி காற்று திருப்திகரமானதாக போன வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தான் இருந்திருக்கின்றது.

இன்று டெல்லியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 27.9 டிகிரி செல்சியஸ் ஆகும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இன்று மாலையில் டெல்லியின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறியது.

தென்மேற்கு பருவமழை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை அறிக்கை மையம் தகவல்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment