குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத ஆகியோரும் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளின் ஆதரவுகளை பெற்றுள்ள பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெறும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், எதிர்க்கட்சிகனின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வரும் ஜூலை 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக முதலில் தலித் வேட்பாளரை நிறுத்தியதையடுத்து, எதிர்க்கட்சிகளும் தலித் வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதியும் நடைபெறவுள்ளது.