Advertisment

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொய்வு; சுயேச்சை எம்.எல்.ஏ வேதனை

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பணிகள் தொய்வு அடைந்து கொண்டே வருகிறது என சுயேச்சை எம்.எல்.ஏ நேரு வேதனை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry independent MLA G Nehru on smart city project

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் பணிகள் தொய்வு அடைந்து வருவதாக சுயேச்சை எம் எல் ஏ நேரு இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

Puducherry independent MLA G Nehru Tamil News: புதுச்சேரி உப்பனாறு மேம்பாலம் கட்டும் பணி, அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மற்றும் சுற்றி உள்ள கடைகள் கட்டும் பணி, பெரிய மார்க்கெட் புதிதாக கட்டும் பணி, மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக பணிகள் தொய்வு அடைந்துள்ளது என புதுச்சேரி சுயேச்சை எம் எல் ஏ நேரு இன்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

Advertisment

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள இடையூறாக இருப்பவர்களை அழைத்துப் பேசி தீர்வு கண்டு மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் வேண்டும். புதிய பேருந்து நிலையம் மற்றும் பெரிய மார்க்கெட் பகுதியில் பல லட்சம் மக்கள் புழங்கும் இடமாக அமைந்துள்ளது என்பதாலும், இது தனிப்பட்ட என் தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுச்சேரியின் பிரச்சனை." என்று கூறியுள்ளார்.

மனு அளிக்கும் போது புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் மற்றும் தலைமை செயலர் ராஜுவர்மா, ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலர் மணிகண்டன் மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர்

India Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment