Advertisment

காங்கிரஸ் பயணம்: ஒற்றுமை இந்தியா யாத்திரை கண்டெய்னர்களில் பாதுகாப்பு விதிமுறைகள் என்ன?

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை இந்தியா யாத்திரை’ பயணத்தில் மூன்று நிலையில் தங்கும் இடங்கள் உள்ளன. பொதுவான உணவருந்தும் பகுதி மற்றும் கண்டெய்னரில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் பற்றிய அறிவுறுத்தலை உள்ளடக்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
Congress on wheels, Congress Bharat jodo yatra, Rahul Gandhi, காங்கிரஸ் கட்சி, ஒற்றுமை இந்தியா யாத்திரை, Inside congress containers, Bharat Jodo yatra TN, Indian Express news

ராகுல் காந்தி தலைமையிலான ‘பாரத் ஜோடோ’ என்கிற ‘ஒற்றுமை இந்தியா யாத்திரை’ பயணத்தில் மூன்று நிலையில் தங்கும் இடங்கள் உள்ளன. பொதுவான உணவருந்தும் பகுதி மற்றும் கண்டெய்னரில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவைகள் பற்றிய அறிவுறுத்தலை உள்ளடக்கி உள்ளது.

Advertisment

இது ஒரு சிறு கிராமத்தைப் போன்றது. இந்த தங்கும் இடம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முகாமிடும் இடத்தில் உருவாகிறது. ஒவ்வொரு இரவும் புதிதாக வருகிறது. சுமார் 60 ட்ரக் பொருத்தப்பட்ட கண்டெய்னர் வேன்கள் ஏ.சி செய்யப்பட்ட படுக்கையறைகளாக மாறியுள்ளது. ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையின் மிகப் பெரிய திட்டமும், காங்கிரஸின் ஐந்து மாத வியூகமும், அதன் நல்வாய்ப்பை மாற்றியமைப்பதும் இவற்றில்தான் உள்ளது.

படுக்கை அறைகளாக மாற்றப்பட்ட கண்டெய்னர்கள் அவற்றின் படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வண்ண-குறியிடப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படுகின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுலுடன் நடந்து செல்லும் 120-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்கியிருப்பதைத் தவிர, ஒரு சிறிய மாநாட்டு அரங்கமாக மாற்றப்பட்ட கண்டெய்னர்களும் உள்ளது.

உதாரணமாக, மஞ்சள் நிற பகுதியில் உள்ளவர்களுக்கு, தலா ஒரு படுக்கை, ஒரு சோஃபா மற்றும் அதனுடன் ஒரு குளியலறை உள்ளன. இந்த வகையான ஒரு கன்டெய்னர் நம்பர் 1-ல் ராகுல் காந்தி தங்குகிறார்.

கண்டெய்னர்கள் அவற்றின் படுக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வண்ண-குறியிடப்பட்ட மண்டலங்களில் நிறுத்தப்படுகின்றன.

அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் எண் 2 எனக் குறிப்பிடப்பட்ட கண்டெய்னரில் உள்ளனர்.

நீல நிறப் பகுதி கண்டெய்னர்களில் ஒவ்வொன்றும் இரண்டு படுக்கைகள், ஒரு கழிவறை உள்ளது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு பகுதி கண்டெய்னர்களில் கழிப்பறை இல்லாமல் நான்கு பேர் வரை தங்கலாம். இளஞ்சிவப்பு பகுதி கண்டெய்னரில் பெண்களுக்கானது. அதில், நான்கு படுக்கைகள் - இரண்டு அடுக்கு படுகைகள் - குளியலறைகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் சேமிப்பு இடத்தில் இருந்து வருகின்றன.

நீல நிறப் பகுதி கண்டெய்னர்களில் ஒவ்வொன்றும் இரண்டு படுக்கைகள், ஒரு கழிவறை உள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

பொது கழிப்பறைகளாக மாற்றப்பட்ட கொள்கலன்கள் 'டி' என குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம், ஏழு கழிப்பறைகள் உள்ளன - ஆண்களுக்கு ஐந்து மற்றும் பெண்களுக்கு இரண்டு என அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம் தளத்திலும் ஒரு தேர்வு செய்யப்பட்ட பொதுவான உணவருந்தும் பகுதி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கண்டெய்னர் ஒரு பார்வை. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

வேன்களை பராமரிக்க தூய்மை செய்யும் குழுக்கள் உள்ளன, தினமும் காலையில் யாத்திரை செய்பவர்கள் நடைபயிற்சி சென்றவுடன் படுக்கை மற்றும் துணிகளை மாற்ற வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அமைப்பு பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் ஏ.ஐ.சி.சி செயலாளர் வம்சி சந்த் ரெட்டி ஆகியோர் கண்டெய்னர் எண் 3-ஐ பகிர்ந்து கொள்கின்றனர். கண்டெய்னர் எண் 4-இல் ராகுலின் ஊழியர்கள் அலங்கார் சவாய் மற்றும் கே.பி. பைஜு ஆகியோர் உள்ளனர். ஏஐசிசி பொதுச் செயலாளர் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நீல நிறப் பகுதியில் உள்ள கன்டெய்னர் எண் 15ல் இருக்கிறார்.

வேன்களில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளில் என்னென்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா யாத்திரை 2வது நாள் பயணத்தை தொடங்கியது. கண்டெய்னர்களுடன் லாரிகளும் நாகர்கோவில் மைதானத்தில் இருந்து புறாப்பட்டது. அவர்கள் அடுத்து இரவில் நிறுத்துவார்கள். தங்குவதற்கு பள்ளி அல்லது கல்லூரி மைதான இடங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.

வேன்களில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளில் சில என்னென்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முகாமில் மதுபானம் மற்றும் புகையிலை நுகர்வு மற்றும் புகைபிடித்தல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வேன்களுக்குள் உணவு உட்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒற்றுமை இந்தியா யாத்திரை செய்பவர்கள் தங்கள் துணிகளை சலவைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், மூன்றாம் நாள் மூன்றாவது நாள் சலவை செய்யப்பட்டு இஸ்திரி போடப்பட்ட துணிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த யாத்திரையில், பாதுகாப்பு அந்தஸ்து உள்ள ராகுல் காந்திக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், மிகவும் கவனமாக இருக்க முடியாது.

ஒரு அறிவிப்புப் பலகையில், “எந்தவொரு தனிப்பட்ட நபரின் பொருட்கள் / மதிப்புமிக்க பொருட்கள் இழப்புக்கு நிர்வாகம் அல்லது அமைப்புக் குழு பொறுப்பேற்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment