Advertisment

ராகுல் காந்தியின் வீடு தேடும் படலம் முடிவு; ஷீலா தீக்‌ஷித் இல்லத்தில் குடியேற திட்டம்

டெல்லியில் புது வீட்டில் குடியேறும் ராகுல் காந்தி; முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் வசித்த இல்லம்

author-image
WebDesk
New Update
sheila home

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அவரது இல்லத்தில் (கோப்பு படம்)

Jatin Anand

Advertisment

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் ஒரு புதிய வீட்டில் குடியேற உள்ளார், அது முன்னாள் டெல்லி முதல்வரும் மறைந்த காங்கிரஸ் பிரமுகருமான ஷீலா தீட்சித்தின் நிஜாமுதீன் (கிழக்கு) இல்லம்.

முன்னாள் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் பார்த்ததாகக் கருதப்படும் "பல இடங்களில் ஒன்று" இந்த வீடு, கட்சி ஆதாரங்களின்படி, 3-BHK வீடு சில "பொதுவான தொடர்புகள்" மூலம் அவரது முக்கிய விருப்பங்களில் ஒன்றாகத் தெரிகிறது.

இதையும் படியுங்கள்: 67 வயது மூதாட்டியின் கடைசி ஆசை; அருணாச்சல பிரதேச கிராமத்திற்கு சாலை வசதி கிடைக்குமா?

வட்டாரங்களின் கூற்றுப்படி, தற்போது அந்த வீட்டில் மூன்று முறை முதல்வரான ஷீலா தீக்‌ஷித்தின் மகன் முன்னாள் எம்.பி சந்தீப் தீக்ஷித் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்செயலாக அவர்கள் அந்த வீட்டை காலிச் செய்ய திட்டமிட்ட நிலையில், இது குறித்து ராகுலின் அலுவலகத்தின் கவனத்திற்கு தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் தீக்‌ஷித் அருகில் உள்ள வேறொரு வீட்டிற்குச் செல்லும் நிலையில், இதற்கு முன்பும் "பல முறை" ராகுல் அந்த வீட்டிற்குச் சென்றிருப்பதால், ராகுல் அதை வாடகைக்கு எடுக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

publive-image

ஏப்ரல் 22 அன்று டெல்லியில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ராகுல் காந்தி தனது இல்லத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பிரவீன் கன்னா)

அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததால், அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட 12, துக்ளக் லேன் இல்லத்தை காலி செய்யுமாறு மக்களவையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நம்பர் 10, ஜன்பத் இல்லத்தில் தனது தாயார் சோனியா காந்தியுடன் தங்கியிருந்த ராகுல், மறைந்த டெல்லி முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பதவியில் இருந்தபோது அவரைச் சந்திக்க "பல முறை சென்ற" நிஜாமுதீன் வீட்டில் குடியேறுவதற்கு விருப்பமாக இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

ஜூலை 8 அன்று, கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுலின் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது, மேலும், "குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் தார்மீகக் கொந்தளிப்பு வகையைச் சேர்ந்தது" மற்றும் "அரசியலில் தூய்மையைக் கொண்டிருக்க வேண்டும்" என்பது "காலத்தின் தேவை" என்பது உட்பட பல கருத்துக்களை நீதிமன்றம் தெரிவித்தது.

2019 ஏப்ரலில் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கோலாரில் "மோடியின் குடும்பப்பெயர் கொண்ட திருடர்கள்" பற்றி அவர் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூரத் மேற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த புகாரில் ராகுல் காந்தி கிரிமினல் அவதூறு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment