ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசூந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிற்கு, அம்மாநில காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை தர மறுத்துள்ள சம்பவம் ஆளும் பாஜக அரசுச்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அம்மாநில காவல்துறையைச் சேர்ந்த 250 பேர் திங்கள் கிழமை விடுப்பு எடுத்துள்ளனர். மேலும், பணியில் இருந்த சிலரும் ராஜ்நாத் சிங்-கிற்கு அணிவகுப்பு மரியாதை செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதாவது, சம்பளத் தொகையானது ரூ.24.000-ல் இருந்து ரூ.19000-ஆக குறைக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்திருப்பதாக வாட்ஸ்அப்-ல் வதந்தி வைரல் அடித்த்துள்ளது. இதை உண்மை என நினைத்து காவல்துறையினர் சுமார் 250 பேர் திங்கள் கிழமை விடுப்பு எடுத்துள்ளனர்.
வாட்ஸ்அப்-ல் பரவியது போலியான செய்தி என்பது பின்னர் தான் தெரியவந்தது. விடுப்பு எடுத்த போலீஸார் மீதும், அணிவகுப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த போலீஸார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்டும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.