Advertisment

ராஜஸ்தான் பள்ளி ஆசிரியை- மாணவி தப்பி ஓட்டம்: சென்னையில் மீட்ட போலீசார்

ராஜஸ்தானில் பள்ளி ஆசிரியை- மாணவி காணாமல் போன விவகாரத்தில் இருவரையும் போலீசார் சென்னையில் மீட்டனர்.

author-image
WebDesk
New Update
Rajasthan police

Rajasthan

ராஜஸ்தான் பிகானேர் நகரைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் 20 வயது ஆசிரியை காணாமல் போன விவகாரத்தில் தாங்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்ட நிலையில் காவல்துறையினர் இருவரையும் சென்னையில் மீட்டனர்.

Advertisment

மைனர் பெண்- ஆசிரியை காணாமல் போனது ‘லவ் ஜிஹாத்’ என வலதுசாரிக் குழுக்கள் குற்றஞ்சாட்டினர். மைனர் பெண் இந்து மற்றும் ஆசிரியை முஸ்லீம் என்று கூறி ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றஞ்சாட்டினர். இருப்பினும் அவர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இருவரையும் சென்னையில் போலீசார் மீட்டனர். இதுகுறித்து பிகானேர் காவல்துறையினர் கூறுகையில், இரண்டு பெண்களும் சென்னையில் மீட்கப்பட்டனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். ராஜஸ்தான் காவல்துறையின் குழுக்கள் தற்போது சென்னையில் உள்ளனர். மேலும் நாங்கள் சென்னை காவல்துறையினர் உதவியுடன் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் ரயில் மூலமாக சென்னைக்கு வந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் மைனர் பெண் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் (CWC) முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அதைத் தொடர்ந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவதா அல்லது அரசு காப்பகத்திற்கு அனுப்பப்படுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை ஆசிரியை- மைனர் பெண் இருவரும் சேர்ந்து வெளியிடப்பட்ட வீடியோவில், நாங்கள் இருவரும் லெஸ்பியன்கள் (தன்பாலின ஈர்ப்பு) என்றும், நாங்கள் காதலிப்பதாகவும் பிரிந்து இருக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

மைனர் பெண்ணின் பெற்றோர் புகாரின் பேரில் ஆசிரியை மற்றும் அவரது சகோதரர்கள் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் இருவரும் வெளியிட்ட வீடியோவில் தாங்கள் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ஆசிரியை தம்மை மூளைச்சலவை செய்யவில்லை என்றும் ஆசிரியை மீதான வழக்கு பொய்யானது என்றும் மைனர் பெண் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment