Advertisment

2001-ல் பா.ஜ.க மீதான எதிர்மறை என்ணத்தை மாற்றிய வாஜ்பாய் உரை… நினைவு கூர்ந்த ராம்நாத் கோவிந்த்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 5வது நினைவு சொற்பொழிவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பா.ஜ.க மனுவாதிகள் அல்ல பீம்வாதி அதாவது அம்பேத்கர்வாதி என்ற வாஜ்பாயின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Atal Bihari Vajpayees 2001 address from Red Fort, அடல் பிஹாரி வாஜ்பாய், பாஜக, ராம்நாத் கோவிந்த், மனுவாதி, பீம்வாதி, Atal Bihari Vajpayee death anniversary, Ram nath kovind, Tamil indian express political pulse

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 5வது நினைவு சொற்பொழிவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பா.ஜ.க மனுவாதிகள் அல்ல பீம்வாதி அதாவது அம்பேத்கர்வாதி என்ற வாஜ்பாயின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

Advertisment

சிலர் காவி கட்சியை தலித் எதிர்ப்பாளர்களுக்கும் மனுவாதிகளுக்கும் ஆதரவான கட்சியாக சித்தரித்த பா.ஜ.க பற்றிய தவறான கருத்துகளை அகற்றுவதில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நேரமறையான பங்கை வகித்ததாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 5வது நினைவு சொற்பொழிவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2001-ல் செங்கோட்டையில் இருந்து வாஜ்பாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு சமூகத்தின் ஒரு பிரிவினரின் மனதில் பா.ஜ.க பற்றிய பார்வையை மாற்றியது என்று கூறினார்.

அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த ராம்நாத் கோவிந்த், செங்கோட்டை மைதானத்தில் பா.ஜ.க-வால் தலித் சங்கப் பேரணி நடத்தப்பட்டது என்றார். “அடல்ஜி பிரதமராக இருந்தார், குஷாபாவ் தாக்கரே பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக இருந்தார். தற்செயலாக அந்த நாட்களில் நான் பா.ஜ.க பட்டியல் இன மோர்ச்சாவின் தேசியத் தலைவராக இருந்தேன். அந்த பேரணிக்கு தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

“அந்த பேரணியில் பேசும்போது, அடல் ஜி தனது அரசாங்கம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக அமைக்கப்பட்டதாக அறிவித்தார். “எங்களுடைய அரசாங்கம் மனுஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படாது, பீம் ஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பீம் ஸ்மிருதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

பா.ஜ.க மனுவாதி அல்ல பீம்வாதி அதாவது அம்பேத்கர்வாதி என்று அந்த மேடையில் வாஜ்பாய் அறிவித்தார். “அடல் ஜியின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; சமூகத்தின் ஒரு பிரிவினரின் மனதில் இருந்து பா.ஜ.க மீதான எதிர்மறை உணர்வை அகற்றுவதில் ஒரு சாதகமான பங்கு வகித்தது” என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ராம்நாத் கோவிந்த் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ‘அஜாதசத்ரு (எதிரிகளே இல்லாதவர்)’ என்று வர்ணித்தார். இந்த நினைவு சொற்பொழிவு வாஜ்பாயின் பாரம்பரியத்தை தொடரும் முயற்சியாகும் என்று கோவிந்த் கூறினார். இந்த சொற்பொழிவை இந்தியா அறக்கட்டளை என்ற சிந்தனைக் குழு ஏற்பாடு செய்தது. இதில் “நல்லாட்சி மூலம் சமூக அதிகாரம்: வாஜ்பாய் வழியில்” என்ற தலைப்பில் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

பா.ஜ.க எம்பியும், முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா கூறுகையில், வாஜ்பாய் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி, பேச்சாளர் என்பதை விட, நாட்டின் பிரதமராக அவர் நல்லாட்சியின் கொள்கைகளைப் பின்பற்றவும், சமூகத்தில் கடைசி மனிதனுக்கு பலன்களை வழங்க நம் அனைவரையும் ஊக்கப்படுத்தினார். வாஜ்பாய் ஏழை மற்றும் பலவீனமானவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்” என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment