Advertisment

இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை அரசு நாடி உள்ளது. இதனிடையே, இந்திய அரசும் அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது

author-image
WebDesk
New Update
இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் நேற்று டெல்லியில் கையெழுத்தானது.

Advertisment

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாகவும் அந்நாட்டு மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் கரைந்தது.

இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை, பால் விலை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.

இதனால், இலங்கை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதியத்தின் உதவியை இலங்கை அரசு நாடி உள்ளது. இதனிடையே, இந்திய அரசும் அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

கடந்த மாதம் ரூ.3,750 கோடிக்கு கடன் உதவி வழங்கியது. இதை எரிபொருள் இறக்குமதிக்கு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டது. மேலும் கடன் உதவி கேட்டு சமீபத்தில் இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே டெல்லி வந்தார். பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேசினார்.

தேர்தல் முடிவுகள்: பி.எஸ்.பி மறுசீரமைப்பில் பெரும் பங்கு வகிக்கும் மாயாவதியின் உறவினர்கள்

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பசில் ராஜபக்சே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment