அதிர்ச்சி வீடியோ: இரக்கமே இல்லாமல் ஒன்றரை நிமிடத்துக்குள் 50 முறை சிறுவனை சரமாரியாக அடித்த ஆசிரியர்

வகுப்பறையில் வருகை பதிவுக்கு மாணவர் ஒருவர் பதில் அளிக்காததால், ஆசிரியை ஒருவர் அச்சிறுவனை சுமார் 50 முறை தொடர்ந்து கன்னத்தில் சரமாரியாக அடித்தார்.

வகுப்பறையில் வருகை பதிவுக்கு மாணவர் ஒருவர் பதில் அளிக்காததால், ஆசிரியை ஒருவர் அச்சிறுவனை சுமார் 50 முறை தொடர்ந்து கன்னத்தில் சரமாரியாக அடித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிர்ச்சி வீடியோ: இரக்கமே இல்லாமல் ஒன்றரை நிமிடத்துக்குள் 50 முறை சிறுவனை சரமாரியாக அடித்த ஆசிரியர்

சமீபத்தில், பாடம் கற்பிக்கும்போது இரக்கமே இல்லாமல் குழந்தையை அவரது தாய் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. தன்னிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறு அக்குழந்தை கெஞ்சியும், அப்பெண் கேட்காமல் அடித்தது மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

Advertisment

இந்த சம்பவத்தை விடவும் மிகவும் கவலைக்குரிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், வகுப்பறையில் வருகை பதிவுக்கு மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் பதில் அளிக்காததால், ஆசிரியை ஒருவர் அச்சிறுவனை சுமார் 50 முறை தொடர்ந்து கன்னத்தில் சரமாரியாக அடிக்கிறார். மேலும், அவனை பிடித்து இழுத்து கன்னம், தலை ஆகிய பகுதிகளில், ஆபத்தை உணராமல் அடிக்கிறார். 2 நிமிடத்திற்குள்ளேயே அச்சிறுவனை பல முறை ஆசிரியை அடித்தது வன்மத்தின் உச்சமாக காட்சியளித்தது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள புனித ஜான் வியன்னே பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட சிறுவனின் கன்னத்தில் தழும்புகள் பலமாக ஏற்பட்டதை பார்த்த அவனது பெற்றோர், சிறுவனிடம் விசாரித்தனர். இதையடுத்து, சக மாணவர்கள் வகுப்பில் நடந்தவற்றை அச்சிறுவனின் பெற்றோரிடம் கூறினர். இதன்பின், பள்ளியின் முதல்வரை சிறுவனின் பெற்றோர் சந்தித்து இதுகுறித்து புகார் கூறினர். இதையடுத்து, வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் ஆராயப்பட்டன. அதிலிருந்து சிறுவனை அடித்த ஆசிரியை ரித்திகா வி.ஜான் என்பது தெரியவந்தது.

Advertisment
Advertisements

இச்சம்பவத்திற்கு ஆசிரியை ரித்திகா மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியானது. அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆசிரியைக்கு எதிராக சிறுவனின் பெற்றோர் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடம் கனிவாகவும், அன்பாகவும் நடந்துகொள்ளாமல் ஏதும் அறியாத சிறு குழந்தைகளிடம் ஆசிரியர்கள் வன்முறையை காட்டுவது, மனித உரிமைகளை மீறும் செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மாணவிகளை வைத்து வாகனத்தை சுத்தம் செய்த ஆசிரியர்: குருசேவை எனவும் விளக்கம்

Teachers Students

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: