Advertisment

இதயம் வலிக்கிறது.. சிறைக் கைதிகளுக்கு ரூ.5 கோடி உதவி.. சுகேஷ் சந்திர சேகர் கடிதம்

சுகேஷ் சந்திரசேகர் 2017 இல் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து 400 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஜாமீன் பத்திரங்களைப் பெற உதவியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sukesh Chandrashekar offers Rs 5 crore for jail inmates welfare ahead of his birthday

சுகேஷ் சந்திரசேகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறை கைதிகளின் நலனுக்காக ரூ.5 கோடி வழங்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.

இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் மீது ஃபோர்டிஸ் நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்களின் மனைவிகளிடம் இருந்து ரூ.200 கோடிக்கு மேல் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஓர் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சிறைக் கைதிகளின் நலனுக்காக ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக சிறைத்துறை டிஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தனது வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் மூலம், சிறைக் கைதிகளின் நலனுக்காக ரூ. 5,11,00,000 நன்கொடை அளிக்க அனுமதி கோரி, சிறைத்துறை டிஜிக்கு மார்ச் 22 அன்று சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தங்கள் ஜாமீன் பத்திரங்களுக்கு பணம் செலுத்த முடியாதவர்கள், தங்கள் ஜாமீனைப் பெற்ற பிறகும் அல்லது பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், முக்கியமாக குழந்தைகள், அவர்களின் கல்வி மற்றும் அவர்களின் வீட்டை நடத்துவதற்கு பணம் இல்லை. அவர்களுக்கு இந்தப் பணம் போய் சேரட்டும்” என எழுதியுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரின் பிறந்த நாள் மார்ச் 25 அன்று வருகிறது. மேலும், 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து 400க்கும் மேற்பட்ட கைதிகளின் ஜாமீன் பத்திரங்களைப் பெற உதவியதாக சந்திரசேகர் கூறியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், "நீதித்துறை சந்தேகத்திற்கு இடமின்றி இந்த விஷயத்தில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள விசாரணைக் குடும்பங்களுக்கு உதவுவது என்பது ஒரு முயற்சி அல்ல. ஏனெனில், பல குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன.

அவர்களின் அன்பானவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே நான் இந்த சிறிய முயற்சியை எடுத்து எனது தனிப்பட்ட சம்பாத்திய நிதியில் இருந்து இந்த சிறிய தொகையை பங்களிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கள் ஜாமீன் பத்திரங்களுக்கு பணம் செலுத்தும் திறன் இல்லாத கைதிகள் மற்றும் தங்கள் குடும்பங்களுக்கு பணம் செலுத்தவோ அல்லது அனுப்பவோ முடியாத கைதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தினசரி அடிப்படையில் பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. டெல்லியின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதர கைதிகளுக்காக தன்னால் செய்யக்கூடிய மிகக்குறைவான பணி இதுவாகும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Sukesh Chandrasekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment