இளம் பல்கலைக்கழக வேந்தர்... அம்பேத்கர் விருது பெற்று சாதனை!

மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே குரியன், டாக்டர்.பாபாசாகிப் அம்பேத்கார் விருதை திலிப் கே நாயருக்கு வழங்கினார்.

மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே குரியன், டாக்டர்.பாபாசாகிப் அம்பேத்கார் விருதை திலிப் கே நாயருக்கு வழங்கினார்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
இளம் பல்கலைக்கழக வேந்தர்... அம்பேத்கர் விருது பெற்று சாதனை!

திருவனந்தபுரம்: இளம் வயதில் பல்கலைக்கழக வேந்தரான திலிப் கே நாயர், டாக்டர்.பாபாசாகிப் அம்பேத்கார் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் 38 வயதில் டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கர் விருதை எந்த பல்கலைக்கழக வேந்தரும் இதுவரை பெற்றதில்லை. இந்நிலையில், இளம் வயதில் பல்கலைக்கழக வேந்தரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த திலிப் கே நாயர் இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு இளம் வயதிலேயே பல்கலைக் கழகத்தின்  வேந்தர் என்ற புகழைப் பெற்ற அவருக்கு, இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறையில் அவரின் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

தற்போது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வட கிழக்கு எல்லைப்புற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கழகத்தின் வேந்தராக பணியாற்றி வருகிறார் திலிப் கே நாயர். மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே குரியன் இந்த விருதை திலிப் கே நாயருக்கு வழங்கினார். கேரளாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது அம்மாநிலத்தின் பொதுப்பணித்துணை அமைச்சர் சுதாகரன் உடனிருந்தார்.

இந்த விருதை பெற்றுக் கொண்ட திலிப் கே நாயர் கூறியதாவது, இது போன்ற கௌவரவமான விருதை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அரசிலமைப்பை உருவாக்கிய அம்பேத்காரின் நினைவாக இந்த விருது அமைந்துள்ளது பெருமையாக உள்ளது. அம்பேத்காரை பின்பற்றியே நான் வாழ்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

Advertisment
Advertisements

நாட்டின் பல்வேறு பகுதிகளில், கல்வித்துறை சார்ந்த திட்டங்களில் திலிப் கே நாயர் 12 வருட அனுபவம் பெற்றிருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூரில் பிறந்த அவர் தனது 24-வது வயதில் தனது பணியை தொடங்கினார். திலிப் கே நாயர் "தி ஆட்டோ மொபைல் சொசைட்டி" மற்றும் "தி எஞ்சினியர் அவுட்லுக்" இதழ் ஆகியவற்றியன் நிறுவனரும் ஆவார். தற்போது, பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் அவர், தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி என 6 மொழிகளில் பேசும் பன்முகத் தன்மையை பெற்றுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: