தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-1.jpg)
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-2.jpg)
இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-3.jpg)
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-4.jpg)
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரம் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-5.jpg)
தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கலவரம் வெடிக்கிறது. ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திரண்ட கலவரக்காரர்களுக்கும், அவர்களை ஒடுக்க வந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-6.jpg)
கலவரத்தில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-7.jpg)
கலவரத்தில் சுமார் 70 மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக இதுவரை 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-8-1.jpg)
தலைநகர் டெல்லி வரை கலவரம் பரவியதால், டெல்லியின் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/panchkula-9.jpg)
ஊடக வண்டிகள், பத்திரிகையாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பொய்யான குற்றச்சாட்டில் ராம் ரஹீம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது வளர்ச்சி அரசுக்கு பிடிக்கவில்லை. ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.