/tamil-ie/media/media_files/uploads/2017/07/a804.jpg)
ஜனாதிபதி தேர்தல் இன்று முடிந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ள வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க பார்லிமென்ட் போர்டு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவாதித்தனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அமித் ஷா இதனை அறிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக தற்போது வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெங்கய்யா நாயடு தற்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்.
முன்னதாக, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி போன்ற பதவிகளில் தனக்கு நாட்டமில்லை என்று வெங்கய்யா நாயுடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.