/tamil-ie/media/media_files/uploads/2017/09/Genital-cut-knife.jpg)
வேறு பெண்ணுடன் திருமணத்திற்கு முயன்ற காதலனின் ஆணுறுப்பை வெட்டிய காதலியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் முவட்டுபுழாவை சேர்ந்த விவாகரத்து பெற்ற 30 வயதான பெண்ணுக்கும் புரத்தூரை சேர்ந்த 26 வயது இளைஞரும் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக பழகி வந்துள்ளனர். தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய இவர்களது நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், இவர்கள் இருவரும் குட்டிபுரம் நகரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக காதலனின் ஆணுறுப்பை காதலி வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் வெளியே ஓடி வந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், அப்பெண்ணை, அவரது காதலன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்ததால், கோபமடைந்த அந்த பெண், தனது காதலனின் ஆணுறுப்பை வெட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், தனது உறுப்பை தானே வெட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.