H1B visa பிரச்னை: ஆபத்தில் 280 பில்லியன் டாலர் ஐ.டி துறை; சட்டப்பூர்வ குடியேற்றத்தை பாதுகாக்க இந்தியா வலியுறுத்தல்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், திறமையான பணியாளர்களால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், திறமையான பணியாளர்களால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
h1b

'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கைக் காலத்தில், H-1B விசாக்களுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. திறமையான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் பாதுகாக்கும் விதமாக, தெற்காசிய நாடான இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்றம் சாராத இந்தப் பணி விசா பிரிவை கடுமையாக மாற்றி அமைத்ததற்கும், கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்ததற்கும் எதிராக இந்தியா பேசியுள்ளது.

Advertisment

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், H-1B விசாக்கள் மூலம் திறமையான பணியாளர்கள் வந்து செல்வதால், இந்திய மற்றும் அமெரிக்கப் பொருளாதாரம் நீண்ட காலமாகப் பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "திறமையானவர்களின் நடமாட்டமும் பரிமாற்றங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன," என்று குறிப்பிட்டார். டிரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய H-1B மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, "இது இன்னும் வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலை. நாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்," என்று பதிலளித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த அதே வாரத்தில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்காவில் "ஆக்கபூர்வமான சந்திப்புகள்" நடந்த சமயத்தில் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் புதிய H-1B விண்ணப்பங்களுக்கு 100,000 டாலர் கட்டணத்தை விதிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவால், கடந்த ஆண்டு H-1B விசா பெற்றவர்களில் 70%-க்கும் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் என்பதால், வேறு எந்தக் குழுவையும் விட இந்தியர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு 280 டாலர் பில்லியன் ஆதரவு இருக்கும் நிலையில், அமெரிக்க அரசு அமெரிக்கப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால், ஆயிரக்கணக்கான வேலைகள் இப்போது ஆபத்தான சூழலில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் பணிநீக்கங்கள் நடந்து வரும் நிலையில், இந்த விசா மாற்றங்கள் மேலும் ஒரு பின்னடைவாக அமையுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

Advertisment
Advertisements

பல அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் சமூக ஊடகங்களில் திறமையானவர்களுக்கான இந்த விசா வகையைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். சிலர் H-1B விசா துஷ்பிரயோகம் என்றும், சிலர் அமெரிக்க வல்லுநர்களுக்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் அமெரிக்க செனட்டர் எரிக் ஷிமிட் இந்த மாத தொடக்கத்தில், "அமெரிக்காவை 'போட்டித்தன்மை' மிக்கதாக வைத்திருக்க H-1B விசா விற்கப்பட்டது. அதற்குப் பதிலாக, அது அமெரிக்கத் தொழிலாளர்களை மாற்றுவதற்காக மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை இறக்குமதி செய்துள்ளது. மேலும், முழுத் தொழில்களையும் வெளிநாட்டு லாபியிஸ்ட்டுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளது," என்று சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் குறை கூறினார்.

விசா மாற்றத்தின் அதிர்வலைகள் வேலைவாய்ப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. H-1B கட்டணம் அவற்றின் வருவாயைப் பாதித்துள்ளதால், இந்தியாவில் உள்ள மென்பொருள் ஏற்றுமதியாளர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக மோசமான வாரத்திற்குத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட பல தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை வரை 5.6% சரிந்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் மிக முக்கியமான வீழ்ச்சியைக் குறித்தது. ஒட்டுமொத்தமாக, நிஃப்டி ஐடி குறியீட்டில் உள்ள பத்து உறுப்பினர்களும் இந்த வாரம் மட்டும் 21 டாலர் மில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) மற்றும் இன்போசிஸ் லிமிடெட் ஆகியவை இந்தச் சரிவில் பெரும்பங்கு வகித்தன.

H1b Visa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: