Advertisment

உக்ரைன் ரிப்போர்ட்: சைரன் சத்தம்; பதுங்குகுழி செல்ல காத்திருந்த இந்திய மாணவர்கள்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஃபஹத், இது வரை (உக்ரைன் நேரம் காலை 9.30 மணி), கிவ்-வில் உள்ள அவர்களின் வளாகம் பாதுகாப்பாகத் தெரிகிறது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
உக்ரைன் ரிப்போர்ட்: சைரன் சத்தம்; பதுங்குகுழி செல்ல காத்திருந்த இந்திய மாணவர்கள்!

கிவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 400 இந்திய மாணவர்கள் வியாழக்கிழமை முதல் நிறுவனத்தின் விடுதியில் ஒன்றாகக் குவிந்துள்ளனர். ரஷ்யப் படைகள் கைப்பற்றுவதற்கு இடையே சைரன்கள் ஒலித்தவுடன் அவர்கள் பதுங்கு குழிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

Advertisment

மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் ஃபஹத் ரஹ்மான் கூறுகையில், “அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களும் இப்போது பல்கலைக்கழக விடுதிக்கு மாறிவிட்டனர். நேற்றிரவு (வியாழன்-வெள்ளிக்கிழமை), ரஷ்யப் படைகள் கிவ்வை குறிவைத்ததாக செய்திகள் வந்ததால் நாங்கள் தூங்கவில்லை. நாங்கள் கிட்டத்தட்ட விழித்திருக்கிறோம், சைரன்கள் ஓய்வதற்காக வரை காத்திருக்கிறோம்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஃபஹத், இது வரை (உக்ரைன் நேரம் காலை 9.30 மணி), கிவ்-வில் உள்ள அவர்களின் வளாகம் பாதுகாப்பாகத் தெரிகிறது என்று கூறினார். “நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி வரை இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் நாங்கள் பல குண்டு வெடிப்புகளை கேட்டோம். ஆனால், அதன் பிறகு, பொது போக்குவரத்து மற்றும் சாதாரண போக்குவரத்து இருப்பது தெரிகிறது. வெளியே நிலைமை சாதாரணமாக தெரிகிறது. கிவ்-வில் உள்ள ராணுவ விமானப்படைத் தளம் தாக்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை மதியம் வரை முழுவதுமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

ஃபஹத் மேலும் கூறுகையில், நிலைமை தீவிரமடைந்ததால், பல்கலைக்கழகம், அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தனது விடுதியைத் திறந்தது. சைரன் சத்தம் எப்போது ஓயும் என்று எதிர்பார்த்திருக்கிறோம். இரவில் நாங்கள் பெரும்பாலும் விழித்திருந்தோம். நள்ளிரவுக்குப் பிறகு, உக்ரைன் டாங்கிகளும் படைகளும் வெளியே சாலையில் நகர்ந்தன. வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்யர்கள் கிவ் நகரத்தை ஆக்கிரமிப்பார்கள் என்று சமூக ஊடகங்களில் சில வதந்திகள் வந்ததால் நாங்கள் விடுதியில் பீதியுடன் காத்திருந்தோம். இதுவரை, நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களிடம் இரண்டு நாட்களுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஆனால் அதன் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

மேலும், உக்ரைனின் மேற்கு எல்லைகளுக்குச் செல்ல தயாராக இருக்குமாறு இந்தியத் தூதரகம் கூறியதாக தெரிவித்தார். “ஆனால் எப்போது வேண்டுமானாலும் குண்டு தாக்குதல்கள் தாக்குதல் நடக்கலாம் என்பதால் நாங்கள் எப்படி சாலையில் பயணிக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மேற்கு எல்லையை அடைய குறைந்தது 12 மணிநேரம் ஆகும். அனைவரும் தங்களின் ஆவணங்களையும் சில அத்தியாவசியப் பொருட்களையும் தங்கள் பைகளில் தயார் நிலையில் வைத்துள்ளனர்” என்று ஃபஹத் கூறினர்.

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்-வில், ரஷ்யப் படைகள் அப்பகுதியை ஆக்கிரமித்த பின்னர், வியாழக்கிழமை மதியம் முதல் இந்திய மாணவர்களின் மற்றொரு குழு பதுங்கு குழிக்குள் தங்கியுள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா திலீப்குமார் என்ற மாணவி கூறுகையில், “நகரில் எங்காவது அடிக்கடி ஷெல் வெடிகுண்டு வீச்சு சத்தம் கேட்கிறது. வியாழக்கிழமை மதியம் முதல் எங்களில் சுமார் 250 பேர் பதுங்கு குழியில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். காலையில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்ததும் நாங்கள் எங்கள் விடுதி அறைகளுக்குத் திரும்பினோம். ஆனால், இப்போது மீண்டும் பதுங்கு குழிக்குத் திரும்பும்படி எச்சரிக்கப்பட்டுள்ளோம்.

வியாழக்கிழமை ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்தே எங்கள் நகரம் தாக்குதலுக்கு உள்ளானது. நாங்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டோம். இப்போதும் (உக்ரைன் நேரப்படி காலை 10 மணிக்கு) எங்கள் விடுதிக்கு அருகில் எங்கோ ஷெல் சத்தம் கேட்கிறது. பதுங்கு குழி ஒரு பெரிய கடை போன்ற வசதி, நாங்கள் அங்கே தான் இருக்கிறோம்.” என்று கூறினார்.

உக்ரைனின் மேற்கு எல்லையில் இருந்து வெளியேறுவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், ரஷ்ய படையெடுப்பின் பாதிப்புகளால் கார்கிவ் மற்றும் பிற வடகிழக்கு பகுதிகளில் தங்கியுள்ள பல இந்தியர்கள் வெளியேறுவது கடினம் என்றும் ஐஸ்வர்யா கூறினார். “நாங்கள் இந்த நாட்டின் மறுபக்கத்திற்கு ஒரு சாலைப் பயணத்தை மேற்கொண்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஷெல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு மத்தியில், சாலை வசியாகப் பயணிப்பதைப் பற்றி எங்களால் யோசிக்க முடியவில்லை” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment