/tamil-ie/media/media_files/uploads/2017/06/a556.jpg)
அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் நேற்று (ஜூன் 14) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த இவரது தந்தை அயர்லாந்தில் குடியேறியவர். 38 வயதே ஆன லியோ, அயர்லாந்தின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பதவியேற்ற பின் உரையாற்றிய லியோ, "நான் உங்களை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், உங்களுக்கு சேவை செய்வேன் என உறுதியளிக்கிறேன்" என்றார். உலக அரங்கில் குடியேறிய மற்றொரு இந்திய குடிமகனின் முன்னேற்றத்தை கொண்டாட இந்திய ஊடகங்கள் தயாராகி வருகின்றன.
ஆனால், லியோ ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை லியோ வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறும் போது, "நான் ஹோமோசெக்ஸ் என்பதால், அது மட்டும் என்னை வரையறுத்துவிடாது. நான் ஒரு அரை இந்திய அரசியல்வாதி அல்ல, அல்லது ஒரு மருத்துவ அரசியல்வாதி அல்ல, அல்லது ஒரு ஓரினச் சேர்க்கை அரசியல்வாதி அல்ல. எனக்கு இதுவொரு பெரிய விஷயமல்ல.. மற்றவர்களுக்கும் இது பெரிய விஷயமாக இருக்காது என நான் நம்புகிறேன்" என்றார்.
இருப்பினும், அரசியலில் முதன்மையான பணிக்கு வரத்கர் உயர்ந்துள்ளார், அயர்லாந்தின் தாராளவாத சான்றுகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார். அந்த நாடு 1993 ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கை குற்றமற்ற ஒன்று என அறிவித்தது. 2015 ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. அப்போது வரத்கர் ஒரு திறந்தவெளி ஓரினச் சேர்க்கையாளர் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.