/tamil-ie/media/media_files/uploads/2017/09/suicide-l-759.jpg)
ஈரான் நாட்டில் 7-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கயவனுக்கு, அந்நாட்டு அரசு பொதுமக்கள் மத்தியில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 7-வயதான சிறுமி அடினா அஸ்லானி கடந்த ஜூன் 19-ம் தேதி காணாமல் போகியுள்ளார்.எனவே சிறுமியை போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 42-வயதான இஸ்மாயில் ஜாப்பர்சாதே என்பவர் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே அவரது வீட்டில் இருந்து சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.
விசாரணையில், இஸ்மாயில் ஜாப்பர்சாதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 11-ம் தேதி இஸமாயில் ஜாப்பர்சாதேவிற்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், அர்டெபில் மாகாணத்தில் உள்ள பாராசாபாத்தில், குற்றவாளிக்கு பொதுமக்கள் மத்தியில், புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான வழங்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.