Advertisment

முடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்... ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ranil Wickremesinghe, ரணில் விக்ரமசிங்கே

Ranil Wickremesinghe, ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா நீக்கினார். அதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை அதிபர் வெளியிட்டார்.

ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் நடவடிக்கைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் முதலில் இடைக்கால தடை விதித்து, அதிபரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதற்கிடையே, புதிய பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ராஜபக்சே நேற்று பதவி விலகினார். அவர் பதவி விலகியதை தொடர்ந்து, இன்று ரணில் விக்ரமசிங்கே பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் 5வது முறையாக பிரதமராகிறார்.

Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment