Advertisment

பள்ளி மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளி மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்!

பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், 14 வயதான பஜ்ஜர் நூர் எனும் மாணவி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மாணவியை பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி புஷ்ரா மற்றும் ரெஹானா எனும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு ஆசிரியர்களும், மாணவி பஜ்ஜர் நூரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவரை அடித்து உதைத்து உள்ளனர்.

பின்னர், அம்மாணவியை பள்ளியின் மேல்தளத்திலிருந்து இருவரும் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment