/tamil-ie/media/media_files/uploads/2017/10/z556.jpg)
இலங்கையில் உள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாத சட்டத்தில் உள்ள கொடூரமான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்றும் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகம் முன்பு பதாகைகளை ஏந்தியபடி இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜிவர்தனே கூறுகையில், "எல்டிடியி-க்கள் இருந்த போது, கடும் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இருப்பினும், இந்த வழக்கு தாமதமின்றி விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us