நடிகை நளினி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான முகம். 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
Advertisment
மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.
இப்போது நளினி, டி.வி சீரியல்களில் நடித்து வருகிறார்.
நளினிசமீபத்தில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
‘எனக்கு குண்டா இருக்கிறது ரொம்ப பிடிக்கும். நான் ஸ்டீராய்டு போட்டுத் தான் என் உடம்ப குண்டாக்கி இருக்கேன்.
என் பையன், அம்மானா, அம்மா மாதிரி இருக்கணும். நீ ஹீரோயின் மாதிரி இருந்த காலமெல்லாம் போயிடுச்சு, எனக்கு எங்க அம்மாவ பாக்கணும், அதனால நீ நல்லா சாப்பிட்டு நல்லா இரு மா, உனக்கு வசதியா இருக்கானு மட்டும் பாத்துக்கோ’ சொல்லுவான்.
அதனால எனக்கு அதை பத்தியெல்லாம் கவலையில்லை, எனக்கு இந்த உடம்பு ரொம்ப பிடிக்கும்..
நான் அப்பளம், ஊறுகாய் இல்லாம சாப்பிட மாட்டேன். இப்போதான் உப்பு கம்மி பண்ணி இருக்கேன்..
நான் சாப்பிடுறதுக்காகவே கல்யாணம் பண்ணேன்.
கல்யாணம் ஆன பிறகு, காலையில நல்ல இட்லி, சாம்பார், சட்னி, வடை போட்டு பிசைஞ்சு சாப்பிடுறதுல இருக்க சந்தோஷம் வேற லெவல்,. மதியானம் அதே மாதிரி தான். இலை நிறைய சாப்பாடு வச்சு சாப்பிடுவேன்.
எங்க வீட்டுல 8 அண்ணன், தம்பிங்க.. எட்டு பேருக்கும் எங்க அம்மா தனித்தனியா பண்ணுவாங்க… அதனால நிறைய சாப்பாடு இருக்கும். அதே பழக்கம் தான் இப்போவும். நிறைய சாப்பாடு செய்ஞ்சு தான் சாப்பிடுவேன்’ இப்படி பல விஷயங்களை நளினி அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“