ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்து தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா.
ஆனால் இவரை ஆயிஷா என்று சொல்வதை விட, ரெளடிபேபி என்று சொன்னால் குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு சத்யா சீரியலில் வரும் ரெளடிபேபி கேரெக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று.
ஆயிஷா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது தன்னுடைய லைஃப்ஸ்டைல், அழகு பராமரிப்பு குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் எந்த சரும பராமரிப்பு வழக்கத்தையும் ஃபாலோ பண்ணமாட்டேன். ஆனா நைட் எவ்வளோ லேட்டா போனாலும் மேக்கப் ரிமூவ் பண்ணிருவேன். தேங்காய் எண்ணெய் எடுத்து, நல்லா முகத்துல தடவி ஃபேஷ் வாஷ் பண்ணிடுவேன்.
எனக்கு கிளியர் ஸ்கின்லாம் கிடையாது. ரொம்ப டார்க் சர்கிள்ஸ் இருக்கும். ஆனா, நான் ஃபேஷியலாம் பண்ணிக்க மாட்டேன். ஒரு தடவை நம்ம ஸ்கின்ல கை வச்சுட்டா அதை மெயிண்டேன் பண்ணனும், ஆனா நான் ரொம்ப சோம்பேறி. அதனால, நல்லா இருக்கிற சருமத்தை ஏதாவது பண்ணி, கெடுத்துக்க வேண்டாங்கிற பயத்துலதான் நான் எதுவுமே பண்ணல…
வீட்டுல இருக்கும் போது ஒரினல் கற்றாழை ஜெல் எடுத்து முகத்துக்கு போடுவேன். தயிர், காபி பவுடர் இல்ல காபி பவுடர், தேன் கலந்து முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். முகப்பரு வந்தா எதுவுமே செய்ய மாட்டேன். அதுவே போயிடும்.
முடி பராமரிப்பு பொருத்தவரைக்கும், வாரத்துக்கு ரெண்டு நாள் தலைக்கு குளிப்பேன். நல்லெண்ணெய், கருவேப்பிலை போட்டு வீட்டுலேயே எண்ணெய் பண்ணிக் கொடுப்பாங்க.. அதைத்தான் யூஸ் பண்ணுவேன்.
நான் பியூர் நான் வெஜிடேரியேன். காலையில, மதியம், நைட் 3 வேளையும் நான் வெஜ்தான் சாப்பாடுதான். பிறந்ததுல இருந்தே அப்படி பழகிட்டேன்.. இவ்வாறு ஆயிஷா தன்னுடைய லைஃப்ஸ்டைல் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.