Advertisment

சுத்தி நெகட்டிவிட்டி.. ஆனாலும் ஜூலி செய்த விஷயம்.. எமோஷனலான ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தன்னை சுற்றி இருந்த நெகட்டிவிட்டிக்கு மத்தியிலும், ஜூலி செய்த ஒரு விஷயம், அறிந்து பிபி ரசிகர்கள் எமோஷனாகி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Bigg boss julie

BB Ultimate Another face of Julie that came out: fans get emotional

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெற்று, கோஷங்களை எழுப்பியதன் மூலம் பாப்புலர் ஆனவர் மரிய ஜூலியானா @ ஜூலி. அதில் கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். அதில் ஆரம்பத்தில் ஜூலிக்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய சப்போர்ட் இருந்தது. ஆனால் போகபோக, ஜூலியின் சில செயல்களால் ரசிகர்கள் எரிச்சலடைந்தனர்.

Advertisment

முக்கியமாக அந்த சீசனில் ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக சோஷியல் மீடியாவில் ஆர்மிக்களை அறிமுகப்படுத்தியதே ஓவியாவின் ரசிகர்கள் தான். ஆனால் அந்த சீசனில், ஓவியாவுக்கும், ஜூலிக்கும் பெரிதாக செட் ஆகவில்லை என்பதாலேயே ஓவியாவின் ரசிகர்கள் கூட ஜூலியின் ஹேட்டர்ஸ்களாக ஆகினர்.

பிக்பாஸ் சீசன் வரலாற்றிலேயே ஜூலி அளவுக்கு ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த போட்டியாளர்களே இல்லையென்று சொல்லலாம்.

அதேநேரம் ஜூலியை நினைத்து கவலைப்பட்ட சிலரும் உண்டு. ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் புகழடைந்து அனைவரிடமும் பாராட்டு வாங்கிய ஜூலி, இப்படி பிக்பாஸ் வீட்டுக்கு சென்று கெட்டப்பெயர் எடுத்து விட்டாரே என சிலர் வருந்தினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியேற்றப்பட்ட போது, கமல்ஹாசனே ஜூலியை உங்கள் தங்கைபோல, வீட்டில் உள்ள ஒரு பெண்ணை போல மரியாதையுடன் நடத்துமாறு ரசிகர்களிடம் கேட்கும் அளவுக்கு ஜூலிக்கு அவ்வளவு எதிர்ப்பு இருந்தது.

பிக்பாஸூக்கு பிறகு, ஒரு சில போட்டியாளர்களே படங்கள், ஷோக்கள் என ஆக்டிவ்வாக இருப்பார்கள். அதில் ஜூலியும் ஒருவர். வெள்ளித்திரை, சின்னத்திரை, யூடியூப் என அத்தனையிலும் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்.

கலைஞர் டிவியின் கலா மாஸ்டர் நடுவராக இருந்த பிரபல நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நேரம் கலா மாஸ்டர் ஜூலிக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருந்தார். பிறகு, யூடியூபில் செலிபிரிட்டிகள் சமைக்கும் நிகழ்ச்சியையும் அவ்வப்போது தொகுத்து வழங்கினார். ‘

இதற்கிடையில், கொரோனா அலை இந்தியாவில் பரவத் தொடங்கியபோது ஒரு செவிலியராகவும் தனது முழு நேரப்பணியை அர்ப்பணிப்புடன் செய்தார்.

இப்படி பிஸியாகவே இருந்த ஜூலி, சமீபத்தில் விஜய் டிவியில் ஓளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, செண்டிராயனுக்கு ஜோடியாக ஆடினார். உண்மையில் சொல்ல போனால், அதில் ஜூலி சிறப்பாகவே நடனமாடினார். ஆனால் செண்டிராயனுக்கு அந்தளவுக்கு டான்ஸ் வராததால், அவருடன் சேர்ந்து ஜூலியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்படி ஒரு நிலையில் தான் ஜூலி மறுபடியும் பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

ஆனால் இம்முறை, பழைய ஜூலி போல அல்லாமல், தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு, ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பேசுகிறார். மற்ற போட்டியாளர்களுடனும் முடிந்த வரை நல்ல உறவையே பேணி வருகிறார்.

இந்நிலையில் தான், ஜூலி செய்த ஒரு செயல், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்த வெறுப்பை அப்படியே தூக்கியெறியச் செய்து, அவர் மீது மீண்டும் நல்ல மதிப்பை வரவைத்துள்ளது.

பிபி அல்டிமேட் வீட்டில், இந்த வாரம் உங்களுக்கு இங்க என்ன வேணும் டாஸ்க் நடக்கிறது. அதில் போட்டியாளர்கள், இரு அணிகளாக பிரிந்து, ஒரு தரப்பு பத்திரிக்கையாளராகவும், மற்றொரு தரப்பு பிக்பாஸ் நட்சத்திரமாக இருந்து, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அதில் செலிபிரிட்டி ஜூலியிடம், மற்ற பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்போது அபி, சுரேஷ் தாத்தா, முதல் சீசனில் ஜூலி செய்த சில சம்பவங்களை பற்றி கேள்விகளை கேட்டனர். அந்த கேள்விகள் அனைத்தும் கோவத்தை கிளப்பும்படியாக இருந்தாலும்’ ,ஜூலி மிக நிதானமாக, அமைதியுடனே பதிலளித்தார்.

அப்போது தாடி பாலாஜி, ஜூலியிடம்’ நீங்க குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டி படிக்க வைக்கறீங்க.. அத ஏன் வெளியே சொல்லல என கேட்கிறார். அப்போதுதான் ஜீலியின் இன்னொரு முகம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

தாடி பாலாஜியின் கேள்விக்கு பதிலளித்த ஜூலி’ நிறைய பேர் நல்ல விஷயம் பண்ணாலே பப்ளிசிட்டிக்காக பண்றாங்கனு நினைப்பாங்க.. ஆனால் நான் செய்ற நல்ல விஷயங்கள் என்னை காப்பாத்துதோ இல்லையோ என் குழந்தைங்கள காப்பாத்தும். எனக்கு அது போதும் என கூறுகிறார்.

அப்போது பாலாஜி மறுபடியும், நீங்க என்ன சொல்லனுமோ அதை விரிவா சொல்லுங்க. எல்லாருக்கும் தெரியட்டும் என்கிறார்.. அப்போது ஜூலி’ நான் பிக்பாஸ் முடித்தபிறகு எனக்கு நிறைய நெகட்டிவிட்டி இருந்தது. அப்போது ஒரு அமைப்பு என்னை வந்து அனுகினாங்க.. ஒன்றரை வயசு குழந்தைக்கு லிவர் சர்ஜரி பண்னனும்.. ககன் அந்த குழந்தையோட பெயர். என்னை சுற்றி இவ்ளோ நெகட்டிவிட்டி இருக்கு.. ஆனா ஒரு வாரத்துக்குள்ள 23 லட்சம் கலெக்ட் பண்ணனும்.. அப்போது நான் என்ன திட்டினாலும் பரவாயில்லை. இந்த குழந்தையோட நிலைமையை பாத்து, ஒவ்வொருத்தரும் ஒரு ரூபாய் போட்டாக்கூட, அதனால அந்த குழந்தைய காப்பாத்த முடியும். நிறைய பேரு திட்டினாங்க.. ஆனா இந்த நேரத்துல அவனுக்காக உதவி செய்த எல்லாருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன். ஒரே வாரத்துல 23 லட்சம் புரட்டிக் கொடுத்து அவனுக்கு லிவர் சர்ஜரி நடந்தது. இன்னைக்கு அந்த குழந்தை, ரொம்ப ஹேப்பியா இருக்கான். அவன் என்னைப் பாத்தாலே அம்மாதான் கூப்பிடுவான் அது எனக்கு ரொம்ப சந்தோஷம் என ஜூலி மிகவும் எமோஷனாலாகி உடைந்து விட்டார்.

இவ்வளவு நாட்களும் நெட்டிசன்கள், பிபி ரசிகர்களும் ஜூலியை மரியாதைக்குறைவாக நினைத்து அப்படித்தான் நடத்தி  வந்தனர். ஜூலி செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்கும் நெகட்டிவிட்டி மட்டும் தான் கிடைத்தது. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையிலும் ஜூலி செய்த இந்த செயல், அவர் மீது ரசிகர்களுக்கு நல்ல மதிப்பை உருவாக்கியுள்ளது.

அதற்காக பலரும் ப்ரோமோக்களில் உள்ள கமென்ட்களில் ஜூலிக்கு தங்கள் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment