ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்கள் இன்றியமையாதது. எவ்வளவு மேக்கப் போட்டும், கண்களில் மை போடவில்லை என்றால், அந்த மேக்கப் முழுமையடையாது. அதேபோல மேக்கப் விரும்பாத பெண்கள் கூட, கண்களில் மட்டும் காஜல், ஐலைனர் மட்டும் அணிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் உண்மைதான்.
கண்களுக்கு காஜல், ஐலைனர் அணிவது கண்களை எடுப்பாக காட்டுவதுடன், உங்கள் முகத் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.
எந்த ரசாயனங்களும் இல்லாமல் வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி, நீங்களே எளிதாக ஐலைனர் தயாரிக்கலாம். இந்த ஹோம்மேட் ஐலைனர் மூலம் உங்களுக்கான புதிய மற்றும் தனித்துவமான ஸ்டைலை உருவாக்குங்கள்.
பாதாம் ஐலைனர் என்பது பழங்கால ஆயுர்வேத அணுகுமுறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு நேச்சுரல் மிக்ஸர், இது பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் கண் இமை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மெழுகுவர்த்தி ஏற்றி, ஒரு இடுக்கி பயன்படுத்தி பாதாமை எடுத்து, கவனமாக தீயில் காட்டி எரிக்கவும். பாதாம் கருப்பாகவும் மாறியவுடன், அனைத்து எரிந்த படிவங்களையும், பட்டர் கத்தி பயன்படுத்தி ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
அடுத்து, திக் கன்சிஸ்டன்ஸி வர, இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் சேர்க்கவும். அவ்வளவு தான் உங்கள் பாதாம் ஐலைனர் ரெடி. இதை வழக்கமான பிளாக் ஐலைனர்களுக்கு பதிலாக உங்கள் கண் ஓரங்களில் தடவலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“