உடல் வறட்சியைத் தடுக்கவும் சருமப் பாதுகாப்புக்கும் பாடி லோஷன் பயன்படுத்துவது அவசியம். ஆனால் ஒரு நல்ல லோஷன் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கும். அது மட்டுமல்லாமல், அழகு தயாரிப்புகளில் பெரும்பாலானவை இரசாயனங்கள் நிறைந்தவை, அவை பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
Advertisment
உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு அளிக்க விரும்பினால், வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய பாடி லோஷன் இங்கே உள்ளது.
தேவையான பொருட்கள்
* கிளிசரின் – 5 டேபிள்ஸ்பூன்
Advertisment
Advertisements
* ரோஸ் வாட்டர் – 7 டேபிள்ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – அரை எலுமிச்சை
* ஒரு பாட்டில்
எப்படி செய்வது?
* முதலில் கிளிசரின் எடுத்து ரோஸ் வாட்டரில் கலக்கவும்.
* அடுத்து அதில் பாதியாக நறுக்கிய எலுமிச்சையை பிழியவும். மூன்றையும் நன்கு கலக்கவும்.
* இப்போது லோஷன் தயாராக உள்ளது.
* நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், ஆனால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்விளைவுகளை நிராகரிக்க முதலில் பேட்ச் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
* காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
* லோஷனை நான்கு நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
நன்மைகள்
* எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த லோஷன், சரும வறட்சி, வெடிப்பு, ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போன்ற பல சரும பிரச்சனைகளை சமாளிக்கும்.
* கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் பாடி லோஷன் சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் தரம் மற்றும் அமைப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
இந்த பாடி லோஷனை தினமும் ஒரு முறையாவது, குளித்துவிட்டு வெளியே வந்த உடனேயே பயன்படுத்தலாம்.
குறிப்பு: அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷன் பயன்படுத்தலாம். மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“