தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து நமது சருமம் நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக விலையுயர்ந்த கிரீம்கள், சலூன் என நாம் அதிக பணத்தை நாம் செலவிடுகிறோம்.
எவ்வாறாயினும் நமது சருமம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருப்பதை உறுதி செய்ய, நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய சில எளிதான அழகுக் குறிப்புகள் உள்ளன. அதில் ஒன்று தான் பால் பவுடர்.
பால் பவுடர், கடலை மாவு மற்றும் ஆரஞ்சு மாஸ்க்
இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபாலியேட் செய்து, டானை நீக்கி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சருமத்துக்கு மிகவும் நல்லது.
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஆரஞ்சு சாறு மற்றும் கடலை மாவு மூன்றையும் கலந்து ஒரு திக் பேஸ்ட் செய்து, அதை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் சமமாக தடவவும். 15 நிமிடம் அப்படியே வைத்து உலர விடவும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் உடனடியாக வித்தியாசத்தைக் காண்பீர்கள். இருப்பினும், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
பால் பவுடர், தயிர் மற்றும் எலுமிச்சை
சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால், இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தவும். இவை ஒன்றாக சேர்ந்து, பிக்மென்டேஷன் மற்றும் புள்ளிகளை அகற்றி, சருமத்தின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கும்.
ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் 20 நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவவும்.
பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டி
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால் கண்டிப்பாக இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும். முல்தானி மட்டி சருமத்திற்கு சிறந்தது என்று அறியப்படுகிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், குறிப்பாக முகப்பருவுக்கு ஆளானவர்களுக்கும் இது உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் பால் பவுடர் மற்றும் முல்தானி மட்டி இரண்டையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து முகம், கழுத்து பகுதிகளில் தடவவும். இது அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். இதை தொடர்ந்து செய்துவர, சில நாட்களில் நீங்கள் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“