Advertisment

தோட்டத்துப் பச்சிலை… பல்வேறு பிரச்சனைகளை நீக்கும் பொடுதலை!

பொடுதலையின் இலை, வேர் மருத்துவப் பயன்பாடு கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தந்து உடல் எரிச்சலைக் குறைக்கிறது,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தோட்டத்துப் பச்சிலை… பல்வேறு பிரச்சனைகளை நீக்கும் பொடுதலை!

ராஜலட்சுமி சிவலிங்கம்

Advertisment

பொடுதலை தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை, வேர் மருத்துவப் பயன்பாடு கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தந்து உடல் எரிச்சலைக் குறைக்கிறது, பசியின்மையை, வாயுத்தொல்லையைப் போக்குகிறது இவ்வாறு ஏராளமான மருத்துவகுணம் கொண்டது இது,

ஒற்றைத் தலைவலி நீங்க

பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலைத் தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகி நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்குப் பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

கை, கால் வீக்கம் குணமாக

சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் வீங்கிவிடும், அவர்கள் இந்த இலையை அரைத்து வீக்கமான பகுதியில் பூசி வந்தால், வீக்கம் குறையும். பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் இதை அடிக்கடி சாப்பிடக்கூடாது. மாதம் ஒருமுறை அல்லது இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தோல் நோய்கள்

அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது. இந்தச் செடியின் இலை, வேர், காய், பூ அனைத்துமே மருத்துவ குணம் உடையது. எனவே வேர், பூ, காயோடு எடுத்து சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி வாரம் இருமுறை தலையில் அழுத்தித் தேய்த்து குளித்து வந்தால், உடல் சூடு குறைந்து, தோல் நோய்கள் குணமாகும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளைப்படுதலை குணப்படுத்த

பெண்களைப் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

கருப்பை வலுப்பெற

கருப்பை பலகீனமாக இருக்கும் பெண்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, கருப்பை வலுப்பெறும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment