கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளியை, சென்னை ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், சென்னை கலாக்ஷேத்திரா சார்பில், ஆண்டுதோறும், கதகளி திருவிழா நடத்தப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு 14வது கதகளி திருவிழா கலாக்ஷேத்திராவில் இன்று (செப். 26) முதல் 30 வரை நடைபெறுகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு பாரத கலாக்ஷேத்ரா ஆடிட்டோரியத்தில் விழா தொடங்குகிறது.
முதல் நாள் நளசரிதம், அதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் சுதத்ரா ஹரணம். மூன்று மற்றும் நான்காவது நாட்களில் முறையே சந்தான கோபாலம் மற்றும் உத்தர ஸ்வயம்வரம் அரங்கேற்றப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“