திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக ஆய்வு செய்ய வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஸ்டைலான உடைகளில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் செய்யப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக ரோம் நகரில் URBASER நிறுவனம் மூலம் திடக்கழிவு கையாளப்படுவதை மேயர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், பாரீஸில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்து அறிந்துக் கொண்டனர்.
இந்தநிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களில் சென்னை மேயர் பிரியா மார்டன் உடைகள் அணிந்து ஃபாரினில் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் பெரும்பாலும் புடவை அணிந்து காணப்படும் மேயர் பிரியா, ரோமில் பேண்ட் – சர்ட் போன்ற ஸ்டைலான உடைகள் அணிந்திருந்தார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், மேயர் பிரியாவை ஸ்டைலிஷ் தமிழச்சி என பாராட்டி வருகின்றனர். மேலும் ’காலா’ காஸ்ட்யூம் போன்று முழுவதும் கருப்பு நிற பேண்ட் - சர்ட்டில் இருக்கும் மேயர் பிரியாவை ரொம்ப போல்டானவரான இருக்காங்க என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil