பெண்களுக்கு திறனளித்தல் மற்றும் திறன் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில் எல்.ஜி அதன் ஏர் சென்டரில் முற்றிலும் பெண்கள் மட்டுமே பணி புரியும் அசெம்பிளி லைன் என்ற உற்பத்தி பிரிவை தொடங்கி உள்ளது.
Advertisment
இங்கு தற்போது இருபது பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் பணிபுரியும் இளம்பெண்கள் எல்.ஜி தொழிற்பயிற்சி பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
இவர்களுக்கு இயந்திரம் வெல்டிங், மின் வேலை, அடிப்படை பொறியியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய மூன்றாண்டு கால விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஷாப் ஃப்ளோரில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் விரிவான முதலுதவி பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் பணிபுரியவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு திறனளித்தல் மற்றும் திறன் மேம்பாடு மூலம் பாலின பன்முகத்தன்மை கொண்ட பணியாளர்களை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையில் எல்.ஜி. பெண்கள் மட்டுமே பணியாற்றும் உற்பத்தி பிரிவை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“