Advertisment

'இரண்டா கிழிப்போம் டா சாதி எனும் திரையை': பறை இசைக்குப் பாடல் பாடி அசத்தும் பள்ளி மாணவி

சாதியை உடைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி பறை இசைக்கு ஏற்றார் போல் பாடல்களை பாடிய 8-ம் வகுப்பு பள்ளி மனைவியின் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
sangavi ramasamy
New Update
vira sch.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை பேரூர் பகுதியை சேர்ந்த தம்பதி சரவணகுமார்- மகாலட்சுமி. இவர்களுக்கு 8-ம்  வகுப்பு படிக்கும் மாணவி ஜனிகா ஸ்ரீ உள்ளார். சிறுவயதில் இருந்தே கலைகள் மீது ஆர்வம் கொண்ட இவர் நடனம், பாடல் பாடுவது உள்ளிட்டவைகளை ஆர்வமாக கற்றுக் கொண்டு வந்துள்ளார்.

Advertisment

இதனிடையே பறையின் மீது ஆர்வம் கொண்ட மாணவி ஜனிகா ஸ்ரீ அவரது நடன ஆசிரியர் சாய்புவன் பறை அடிக்க அதற்கு ஏற்றார் போல் பாடல் பாடி அசத்தி உள்ளார். சாதியை உடைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி பாடல் பாடியுள்ளார். 

"எடுத்து அடிடா நம்மோட பறையை"

"இரண்டா கிழிப்போம் டா சாதி எனும் திரையை" 

"வானம் பொளக்கட்டும் பறையோட முரசுல"

"காற்று கிழியட்டும் அடிக்கிற அடியில" - என்கிற வரிகளின் மூலம், சாதியை உடைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி பாடல்களை  பாடியுள்ளார். தற்போது பள்ளி மாணவி பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment