சரியாக சாப்பிடுவது என்பது சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தினசரி ஆரோக்கியமான உணவை சமைப்பது பற்றியது. திறமையான பிரபல இந்திய செஃப் ரன்வீர் பிரார், அந்த வாழ்க்கை முறையை அடைய உங்களுக்கு உதவுவதற்காக சில சமையல் வித்தைகளை கூறியுள்ளார்.
Advertisment
தயிர்
கிரீம்க்கு பதிலாக தயிர் (whisked yogurt) பயன்படுத்த ரன்வீர் ஆலோசனை கூறுகிறார். பல இந்திய ரெசிபிகளில் க்ரீம், உணவுகளின் அமைப்பை மிருதுவாகவும் கிரீமியாகவும் மாற்றுவதற்கு ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. ஆனால் நீங்கள் தயிர் மூலம் அதே முடிவுகளை அடைய முடியும். இது கொழுப்பை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைக்க உதவுகிறது, என்கிறார் ரன்வீர்.
வெள்ளை அரிசி வேண்டாம்
வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி பயன்படுத்தலாம். சிவப்பு அரிசி ஒரு ஆரோக்கியமான தேர்வு மற்றும் இப்போதெல்லாம் எளிதாகக் கிடைக்கிறது. சிவப்பு அரிசி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், உங்களை முழுதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
30-30-30 ஃபார்முலா
ரன்வீர் எப்போதும் 30-30-30 ஃபார்முலாவைப் பின்பற்றுமாறு மற்றவர்களை அறிவுறுத்துகிறார், அதை அவர் தீவிரமாக நம்புகிறார். 30 நாட்களுக்கு சீசனில் இருப்பதையும், நம் நகரத்திலிருந்து 30 மைல்களுக்குள் விளையும் காய்கறிகளையும் மற்றும் 30 சதவீத பச்சை பழங்கள் மற்றும் காய்கறிகளை நம் உணவில் சேர்க்க வேண்டும். இதன் பொருள் நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புதிய, ஆரோக்கியமான மற்றும் பருவகால உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்று செஃப் விளக்குகிறார்.
முன்கூட்டியே ஊற வைக்கவும்
பருப்பு வகைகள், தானியங்கள், பீன்ஸ் அனைத்தையும் முன்கூட்டியே ஊற வைக்கவும். முன்கூட்டியே ஊறவைப்பது ஒரு நல்ல பழக்கமாகும், ஏனெனில் இது சமைக்கும் நேரத்தை குறைக்கிறது, ஆரோக்கியமான நொதிகளைத் தூண்டுகிறது மற்றும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.
மேலும் வீட்டில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பச்சை சர்க்கரை (Raw sugar) பயன்படுத்தலாம்.. பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட பச்சை சர்க்கரை எப்போதும் சிறந்தது, என்கிறார் செஃப் பிரார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“