/indian-express-tamil/media/media_files/2025/05/06/6ACgUnmQXD2Xll6EoNib.jpg)
அனைவருமே பார்ப்பதற்கு அழகாகவும், பொலிவாகவும் காட்சியளிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், அதற்காக சரியான சரும பராமரிப்பு முறையை பலரும் பின்பற்றுவது கிடையாது. ஆரோக்கியமான சருமம் என்பது ஒரே நாள் இரவில் கிடைத்து விடாது.
இதற்காக நேரம் ஒதுக்கி சில சரும பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக விலை உயர்ந்த ஃபேஸ் க்ரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
அவ்வாறு, இயற்கையான ஃபேஸ் பேக் எப்படி தயாரிக்கலாம் என்று மருத்துவர் ப்ரீத்தா நிலா விளக்கம் அளித்துள்ளார். இதற்காக மஞ்சிஸ்தா வேர் இருந்தால் போதுமானது. இடி கல்லில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சிஸ்தா வேரை நன்றாக தேய்க்க வேண்டும். இத்துடன் சேர்த்து லேசாக கஸ்தூரி மஞ்சள் கிழங்கையும் உரச வேண்டும்.
இப்படி செய்தால் இரசாயனங்கள் சேர்க்காத இயற்கையான ஃபேஸ் பேக் தயாராகி விடும். இந்த ஃபேஸ் பேக்கை நமது சருமத்தில் தடவ வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் போது நம் முகம் பொலிவாக மாறும். இது தவிர நம்முடைய தோற்றத்தை 5 வயது இளமையாக காண்பிக்கும்.
இந்த ஃபேஸ் பேக்கின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், 5 நிமிடங்களில் இதனை தயாரித்து விடலாம். எனவே, இதனை சிம்பிளாக செய்திட முடியும். இதில் செயற்கையான பொருட்கள் எதுவும் கலக்காததால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் இல்லை.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.