Advertisment

ஒரு துளி விளக்கெண்ணெய்; சோர்வான கண்களுக்கு ஆயுர்வேத மருத்துவர் சொல்லும் வைத்தியம்

டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதிக வெளிச்சம் ஆகியவற்றால் நம் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Simple Ayurvedic remedies to keep your eyes healthy

ஒரு நாளில் நாம் செய்யும் முதல் மற்றும் கடைசி காரியம் நமது போன்களைப் பார்ப்பது தான். கூடுதலாக, நாம் பகல் முழுவதும் மொபைல் மற்றும் மடிக்கணினிகள் முதல் தொலைக்காட்சி வரை - பல்வேறு திரைகளை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த பழக்கம் நாளடைவில் நம் கண்களை பாதிக்கலாம், இது கண்களில் அசௌகரியம், அரிப்பு, மற்றும் அடிக்கடி நீர் வடிதல் அல்லது வறண்டு, இறுதியில் சோர்வுக்கு வழிவகுக்கும்.

Advertisment

டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதிக வெளிச்சம் ஆகியவற்றால் நம் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா.

ஆயுர்வேதத்தின் படி, கண் தசைகள் பூமியின் உறுப்பு, இரத்த நாளங்கள் நெருப்பால், கண் நிறம் காற்றால், கண்ணின் வெள்ளை பகுதி தண்ணீரால், மற்றும் கண்ணீர் குழாய்கள் விண்வெளியால் நிர்வகிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

publive-image

எனவே, உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, டாக்டர் டிம்பிள் சிறந்த 5 வைத்தியங்களை பரிந்துரைத்தார்:

*ஆயுர்வேதத்தின்படி, காலையில் வாயில் தண்ணீர் வைத்து கொப்பளித்துக் கொண்டு கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்களைக் கழுவுவதற்கு மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக்கூடாது, சாதரண அறை வெப்பநிலையில் இருக்கும் நீரை பயன்படுத்துங்கள்.

*சோர்ந்த கண்களை ஆற்றுவதற்கு, காட்டன் துணி அல்லது பஞ்சை ஆட்டுப்பாலில் ஊறவைத்து அதை கண்களில் சிறிது நேரம் வைக்கலாம்.

மருத்துவர் டிம்பிள் வறண்ட கண்களுக்கு ஒரு ஆயுர்வேத தீர்வையும் பரிந்துரைத்தார் - இரண்டு கண்களிலும் ஒரு துளி விளக்கெண்ணெய் வைத்து, கால்களின் பாதங்களில் எண்ணெய் தடவவும்.

வெள்ளரிக்காய் துண்டுகள் அவற்றின் குளிர்ச்சி விளைவுடன் கண்களை ஆற்றவும் உதவுகின்றன. மாற்றாக, கேடசின் (ஒரு ரசாயன கலவை) உள்ள டீ பேக்ஸையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும், ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் யோகினி பாட்டீல் கூறுகையில், ஆரோக்கியமான கண்களைப் பராமரிக்க பழங்கால இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல்வேறு எளிய மருந்துகளை வழங்குகிறது. அனைத்து உணர்வு உறுப்புகளிலும், சமஸ்கிருதத்தில் நேத்ரம் என்று அழைக்கப்படும் கண்களுக்கு, அதன் செயல்பாட்டின் காரணமாக முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்களுக்கான ஆயுர்வேத சிகிச்சையானது பார்வையை மேம்படுத்த ஒரு முழுமையான அணுகுமுறையை எடுக்கிறது. ஆயுர்வேதம் அதன் வேரில் இருந்து சுகாதார சிக்கல்களை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முடிவுகளைக் காட்ட இது கணிசமான நேரம் எடுக்கும் என்றாலும், விளைவு நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் முழுமையாக புத்துயிர் பெறும்.

டாக்டர் யோகினி சில உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்:

publive-image

உள்ளங்கையில் கொஞ்சம் தேன் மற்றும் நெய் கலந்து தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவலாம். இது கண்களை ஈரப்பதமாக்கவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது.

திரிபலாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரைக் கொண்டு கண்களை கழுவலாம். இது பார்வையை மேம்படுத்தவும், சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

*கேரட் மற்றும் கீரைகள் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் ஆரோக்கியமான கண்களை பராமரிக்க நன்மை பயக்கும்.

*யோகா ஆசனங்களான ஷிர்ஷாசனம் மற்றும் த்ரடகா போன்றவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் கண்பார்வையை மேம்படுத்துவதோடு, கண்களின் அழுத்தத்தையும் குறைக்கலாம்.

எந்தவொரு புதிய சிகிச்சை முறையிலும் ஈடுபடுவதற்கு முன்பு ஆயுர்வேத பயிற்சியாளரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் அவசியம் என்று நிபுணர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment