கோவையில் முதன்முறையாக பெஸ்டிவ் ட்ரங்க் ஷோ எனப்படும் ஆடம்பர ஆடைகள் மற்றும் நகைகள் மற்றும் வாட்ச் கண்காட்சி தொடங்கியது.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில் இன்று தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை ஒருகிணைத்துள்ள டாக்டர் ஆதித்யன் குகன் மற்றும் சங்கீதா பீட்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நகைகள் மற்றும் ஆடைகள் குறிப்பாக விலையுர்ந்த வாட்ச் போன்ற பேஷன் அணிகலன்கள் மீது கோவை மக்களுக்கு எப்போதுமே தனி ஆர்வம் உண்டு.
எனவே நகை வடிவமைப்பாளர் சங்கீதா பீட்டருடன் இணைந்து தென் இந்தியாவில் முதன் முறையாக இந்த கண்காட்சியை நடத்தி வருகிறோம்.
இங்கு உள்ள பொருட்கள் உலகளவில் பிரபலமான கோவை மக்கள் விரும்பக்கூடிய அவர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டது.
வெளிநாட்டு பிராண்ட் வாட்ச், கண் கண்ணாடி, ஜூவல்லரி, ஆடைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இது போன்ற ‘‘பெஸ்டிவ் ட்ரங்க் ஷோ’’ சென்னையில் கூட நடைபெற்றது இல்லை.
இந்த டிரங்க் ஷோவில் ஆண்களுக்கான டிசைனர்கள் ராகவேந்திரா ரத்தோர், பெண்கள் உடைகளுக்கு மிருணாளினி ரோவா / கீதிகா கானுமல்லி / சித்தார்த்தா பன்சால், தி ஹெல்வெடிகா ஸ்விஸ் வாட்ச் போட்டிக் ஆகியவை 2-3 பிரமாண்டமான ஆடம்பரமான வாட்ச் பிராண்டுகள் கோவைக்கு முதன் முதலாக கொண்டுவந்துள்ளோம்.
தங்கத்தின் தனித்துவமான வடிவமைப்பு கொண்ட நகைகள் கண்காட்சில் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.
இன்று துவங்கிய கண்காட்சி நாளை முடிவடைகிறது. இங்கு திருமணம், பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்ப நகை, வாட்ச்,கண்ணாடி என பல வகை ஆடம்பரமான ஆடைகள் விற்பனை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
எனவே கொங்கு மக்கள் வெளிமாநிலங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.