ஜி 20 அமைப்பின் 18- வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப். 9) கோலாகலமாக தொடங் கி இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ம் தலைவர்க ள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
இதற்காக இந்த நகரமே மாற்றி அமைக்கப்ப ட்டுள்ளது . ஆனால் சிலருக்கோ ஒட்டுமொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டது .
தர்மேந்திர குமார் , குஷ்பு தேவி மற்றும் இவர்களின் குழந்தைகளும் இதில் அடக்கம் . ஜி 20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர் .
ஆனால் தற்போது இவர்கள் இங்கிருந்து வெளியே ற்றப்பட்டுள்ளனர் ..
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
VIDEO
'ஜி 20 மாநாட்டுக்காக இந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் , இங்கிருந்து வெளியேறுமாரு அதிகாரிகள் கூறுகின்றனர் . சுத்தம் செய்வது என்றால் ஏழை , எளிய மக்களை அகற்றுவது என்று அர்த்தம் கிடையாது .
எங்களை போன்ற ஏழை எளிய மக்களை பார்க்க பிடிக்கவில்லை என்றால் அழகான திரைசீலைகளை அல்லது துணிகளைக் கொண்டு நாங்கள் தெரியாதவாறு மூடிவிடுங்கள் என்று கண்கலங்குகிறார்' குடிசைவாசி குஷ்புதேவி …
இதுபோன்று குடிசைகளில் வாழும் மக்கள் வறுமைக் கோட்டுக்கு மிகவும் கீழே உள்ளவர்கள் , எனவே உடனடியாக மாற்று இடத்தில் வசிக்க ஏற்பாடு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல …
குஷ்புதேவியின் கணவர் தர்மேந்திர குமார் கூறும்போது , வேறு இடத்தில் வாடகை கொடுத்து வசிக்கும் அளவுக்கு நான் சம்பாதிக்கவில்லை . இங்கிருந்து நாங்கள் வெளியேறினால் எங்கள் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் ..
இங்கு பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் அவர்களால் எளிதாக படிக்க முடிகிறது , என்றார் …
கடந்த மே மாதத்திலிருந்து புல்டெளசர் இங்குள் ள ஜனதா முகாமை அகற்றி வருகிறது . இங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத் தினர் …
இந்த குடிசைகள் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர் .. ஆனால் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்களால் , அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை …
கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இங்குதான் வசித்து வருகிறோம் . திடீரென எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டால் நாங்கள் எங்குதான் செல்வது ? எங்களுக்கு எந்த வசதியோ , வேறு இடமோ கிடையாது . வீடு இல்லாதவர்களாக சாலையில் தஞ்சமடைந்து உள்ளோம் … ஏழைகளின் சாபத்தால் இந்த அதிகாரிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள் , என்று ஆதங்கத்துடன் இந்த குடிசைகளில் வசிக்கும் ஒரு பெண் ….
குடிசைகள் அகற்றப்படுவதை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றத்தை அணுகினர் . ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை . குடிசைப் பகுதிகள் சட்ட விரோதமானவை என நீதிமன்றமும் அறிவித்து விட்டது .
இங்கு வசிக்கும் மக்கள் தற்போது எங்கு செல்வது என தெரியாமல் தெருக்களில் தஞ்சமடைந்து உள்ளனர் …
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“