scorecardresearch

5 லிட்டர் தண்ணியில 10 மிலி வேப்ப எண்ணெய் கலந்து: பூச்சி தாக்குதலுக்கு இதை பண்ணுங்க

தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும். அதுக்கு சிம்பிள் தீர்வு வேப்ப எண்ணெய் தான். ஆனா, இது ரொம்ப கலக்க கூடாது. அப்படி செய்ஞ்சா இலையெல்லாம் கருகி போயிடும்.

lifestyle
Gardening tips

பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 1,500 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர்.

அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் ஒருமுறை மாடி தோட்டத்து செடிகள் நன்கு வளர்வதற்கான பல குறிப்புகளை குப்புசாமி பகிர்ந்து கொண்டார்.

மாடியிலத் தோட்டம் வைக்கும்போது தொட்டியை நேரா தரையில வைக்க கூடாது. செங்கல பாதியா உடைச்சு வச்சு அதுக்கு மேலே தொட்டி வச்சா, தண்ணி வடிஞ்சி அப்படியே ஓடிடும். தரையில நிக்காது. காத்துலேயே காய்சிடும். தளத்துக்கு எந்த பிரச்சனையும் வராது.

தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. தொட்டி ஓரத்துல இல்ல அடியில ஓட்டை போட்டு, அதுல மண் ஓடு வச்சு அதுமேல ஆத்து மணல் கொட்டி இன்னும் சொல்லப்போனா, தென்ன கேக் உடைச்சி போட்டு அதுக்கும் மேல மண், செம்மண், மாட்டுச்சாணம் கலந்து உரத்தை போட்டு கையால அமுக்கமா அப்படியே தண்ணி விட்டு விதைய போடலாம் இல்ல செடிகள நட்டு வைக்கலாம். இப்படி பண்ணா தண்ணி நிக்காது. செடி நல்ல வளரும்.

பூச்சி தாக்குதலுக்கு

தோட்டம் இருந்தா பூச்சி கண்டிப்பா வரும். அதுக்கு சிம்பிள் தீர்வு வேப்ப எண்ணெய் தான். ஆனா, இது ரொம்ப கலக்க கூடாது. அப்படி செய்ஞ்சா இலையெல்லாம் கருகி போயிடும். ஒரு 5 லிட்டர் தண்ணில, 10 மிலி கலந்து ஸ்பிரே பண்ணிட்டா பூச்சி வராது. கசப்பு பூச்சிக்கு பிடிக்காது. அதேபோல செம்பருத்தில வெள்ளைப்பூச்சி வரும். அதுக்கு சாதம் வடிச்ச கஞ்சியில  நல்ல தண்ணி ஊத்தி வடிகட்டி, அதுல கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து ஸ்பிரே பண்ணா, கஞ்சியானது செடியில ஒட்டிக்கும். பூச்சி செத்துரும்.

இன்னும் மழைக்காலத்துல சரியான சூரிய ஒளி கிடைக்காம செடியெல்லாம் சுருங்கி போயிடும். அதுக்கு வேப்பம் பிண்ணாக்கு கடையில கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து தண்ணில ஊறப்போடுங்க. ஒரு ஐந்து கிலோ வேப்பம் பிண்ணாக்குக்கு 20 – 25 லிட்டர் தண்ணி ஊத்துங்க. அது நல்ல ஊறிடும். ஒரு தொட்டிக்கு ஒரு டம்ளர் மேல ஊத்தக்கூடாது. இதை செய்ஞ்சா இந்த குளிருக்கு, செடிக்கு கம்பளி போத்துன மாதிரி இருக்கும். வேப்பம் பிண்ணாக்கோட தண்ணி வேருக்கு சூடு கொடுக்கும்.

எப்போவுமே செடிகளுக்கு உரம் போட்டுட்டே இருக்கணும். நான் மண்புழு உரம் போடுறேன். கெமிக்கல் உரமெல்லாம் போடாதீங்க. அது பெரிய பிரச்னை ஆயிடும். ஆர்கானிக் உரம் தான் போடணும். சில பேரு டிஏபி உரம் போடுவாங்க. அதையும் அப்படியே போடக்கூடாது. ஆர்கானிக் உரத்துல அரை ஸ்பூன் கலந்து போடுங்க. ரொம்ப போட்டோ செடி செத்து போயிடும், இவ்வாறு பல விஷயங்களை புஷ்பவனம் குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Gardening tips pushpavanam kuppusamy terrace garden

Best of Express