குளிர்கால காய்கறிகள் என்று வரும்போது, பச்சை பட்டாணி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த பச்சை காய்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, இது பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
பச்சைப் பட்டாணியை ஆண்டு முழுவதும் சுவைக்க, நீண்ட நேரம் வீட்டில் எப்படிப் பாதுகாத்து வைப்பது என்று பார்ப்போம்!
அனன்யா சவுத்ரி (software engineer, gardener, and anthophilous, Pune), பின்வருவனவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
முதலில், பட்டாணியை அதன் தோலில் இருந்து பிரித்து வெளியே எடுக்கவும், நிறம் மாறிய அல்லது சேதமடைந்த பட்டாணிகளை அப்புறப்படுத்தவும்.
பட்டாணியை கொதிக்கும் நீரில் 1-2 நிமிடங்களுக்கு, போடவும். அதன் பிறகு, உடனடியாக ஐஸ் நீரில் போடவும். ஒரு சல்லடை கூடையில் சேர்த்து தண்ணீரை வடிகட்டவும். இந்த செயல்முறை அதன் துடிப்பான பச்சை நிறத்தை அப்படியே வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், அதன் அதிகபட்ச ஊட்டச்சத்து மதிப்பையும் அப்படியே வைத்திருக்க உதவுகிறது.
என்சைம்களை செயலிழக்கச் செய்ய கழுவுவது மிகவும் முக்கியமானது. இது பட்டாணி மீது நுண்ணுயிர் சுமையை குறைக்கிறது, சேமிப்பின் போது பாக்டீரியா அல்லது நுண்ணுயிர் வளர்ச்சிக்கான சாத்தியத்தை குறைக்கிறது, என்று சவுத்ரி கூறினார்.
பட்டாணி நன்கு குளிர்ந்ததும், சுத்தமான கிச்சன் டவல் அல்லது பேப்பர் டவலைப் பயன்படுத்தி உலர வைக்கவும்.
இப்போது இந்த பட்டாணிகளை காற்று புகாத ஜிப்-லாக் பை, ஃபிரிசர் சேஃப் கன்டெய்னர்ஸ், ஹெவி டியூட்டி ஃபிரிசர் பேக்ஸ்- இல் சேமிக்க முடியும்.
பயன்படுத்தப்படாத பட்டாணி காற்றில் வெளிப்படுவதைத் தடுக்க, பேக்கேஜிங் செய்வதற்கு முன், பட்டாணியை தனித்தனி அளவுகளாகப் பிரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பேக்கேஜிங் தேதியின்படி அவற்றை லேபிளிடுங்கள், அது பட்டாணியின் ஃபிரெஷ்னெஸை பின்னர் அடையாளம் காண உதவும்.
இறுதியாக, அதை ஃப்ரீசரில் வைத்து அடுத்த 8-12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
செஃப் நேஹா தீபக் ஷா படிப்படியான வழிகாட்டியைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு பாத்திரத்தில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அது சூடானதும், 1 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்கவும் (சோடா சேர்ப்பதால் நிறம் நீண்ட நேரம் பிரகாசமாக இருக்கும்)
தண்ணீர் கொதித்து வந்ததும், பச்சை பட்டாணி சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
இதை உடனடியாக குளிர்ந்த நீரில் மாற்றவும். நாம் பச்சை பட்டாணியை சமைக்கவில்லை என்றாலும், இது தோலின் மேல் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும், என்று ஷா பகிர்ந்து கொண்டார்.
உலர்த்துவது மிகவும் முக்கியம். இது உங்கள் பச்சைப் பட்டாணி ஒன்றுடன் ஒன்று சேராமல் இருப்பதையும், உறைந்திருக்கும் போது தனித்தனியாக இருப்பதையும் உறுதி செய்யும்.
பேக்கிங் சோடா தண்ணீரை சற்று கார pH ஆக மாற்றுகிறது, இதனால் பச்சை நிறம் அப்படி இருக்கும். நான் அதை மிகவும் பரிந்துரைக்கிறேன், என்று ஷா மேலும் கூறினார்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஒரு வருடம் முழுவதும் ஃப்ரீசரில் சேமிக்கப்படும் போது பட்டாணியின் பிரகாசமான பச்சை நிறத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறீர்கள்.
கழுவும் போது சில ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படலாம் என்றாலும், மற்ற சமையல் முறைகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு.
Read in English: How to store green peas fresh in the fridge for longer
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.