சூடான தேங்காய் எண்ணெய் மசாஜ் உச்சந்தலையை உயவூட்டுகிறது. மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது முடி தண்டு மற்றும் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இராசயனங்கள் நிறைந்த அழகு தயாரிப்புகளை விட, முடியை பராமரிக்க இயற்கையான முறையே சரியான வழியாகும்.
ஷாம்பூவுக்குப் பிறகு, தலைமுடியை கண்டீஷனிங் செய்ய வேண்டும், ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம் அதை அடையலாம். முடியை மென்மையாகவும், ஊட்டமளித்து வலுவாகவும் வைக்க ஹேர் மாஸ்க் அவசியம்
முடியை ஷாம்பு செய்த பிறகு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தவும். துண்டை வைத்து உலர்த்தி, பின்னர் தலைமுடி முழுவதும் தாராளமாக மாஸ்க் பயன்படுத்துங்கள், வேர் பகுதியில் இருந்து அரை முதல் ஒரு அங்குல முடியை விட்டு விடுங்கள்.. அப்ளை செய்து முடிந்ததும் முடியை சீவுங்கள், சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
சமையலறையில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நீங்களே சொந்தமாக ஹேர் மாஸ்க் செய்யலாம்.

ஹேர் மாஸ்க் எப்படி செய்வது?
½ கப் பால்
2 டீஸ்பூன் தேன்
5-6 சொட்டு சந்தன எண்ணெய்
ஒரு கிண்ணத்தில் மூன்றையும் ஒன்றாக கலந்து, தலைமுடியில் நன்கு மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு, பின் கழுவவும்.
குறிப்பு: உங்கள் தலைமுடியை இயற்கையாக உலர வைக்கவும். ஈரமான முடியுடன் வெளியே செல்ல வேண்டாம். இது முடி பிளவுபடுவதை ஊக்குவிக்கிறது. வழக்கமான எண்ணெய் மசாஜ் செய்யவும். ப்ளோ ட்ரையர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சாதரண நீரில் தலைமுடியைக் கழுவுங்கள், ஏனெனில் வெந்நீர் முடியின் அமைப்பைக் கெடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“