/tamil-ie/media/media_files/uploads/2018/10/750.jpg)
சௌந்தரப் பாண்டியன் அங்காடி என்ற மார்க்கெட் இடம் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்று பாண்டி பஜாராக மின்னுகிறது. இந்த பக்கம் தி நகர் அந்த பக்கம் மவுண்ட் ரோடு என்ற சென்னையின் அன்பு மிக்க அடையாளங்களுக்கு நடுவே பயணிக்கிறது பாண்டி பஜார்.
அந்த காலத்தில் வணிகம் செய்ய சென்னை வருபவர்களுக்கு பாண்டி பஜார் புகலிடமாக இருந்துள்ளது. குறிப்பாக சினிமா துறையில், பெரும்போலானோர் இந்த இடத்தில் தான் தங்களது வாழ்வை தொடங்கியுள்ளனர். ஒரு பக்கம் டீ கடை மற்றோடு பக்கம் நட்சத்திர ஹோட்டல் என்று அணைத்து வகையான மக்களின் தேவையையும் இந்த இடம் பூர்த்தி செய்கிறது.
35 வருஷமா இங்க தான் இருக்கேன் என்று சொல்லும் மாரியம்மை பாட்டியாக இருந்தாலும் சரி; 1940ல் தொடங்கி இன்று வரை தங்களது பணியினை தொடர்ந்து செய்யும் கேரளா ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ் கடையும் சரி, இந்த இடத்திலே பல வருடமாக இருப்பவர்களுக்கு இது சொர்க்கபூமி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.