/indian-express-tamil/media/media_files/2025/10/12/stain-2025-10-12-12-02-02.jpg)
நாம் எல்லோரும் நம் வீட்டை சுத்தமாக வைப்பத்தில் அதிக ஆர்வம் காட்டுவோம். அதிலும், ஒரு வீட்டின் கழிப்பறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆனால், ஒரு சில நேரங்களில் நாம் என்னதான் செய்தாலும் கழிப்பறை மற்றும் வீட்டின் டைல்ஸ்கள் சுத்தமாகுவதே இல்லை. இதற்கு காரணம் நாம் வீட்டில் பயன்படுத்தும் உப்பு தண்ணீர் தான்
ஆமாம், நாம் வீட்டில் உப்பு தண்ணீர் (Hard water) பயன்படுத்தும் போது அந்த உப்புகள் நம் வீட்டு கழிப்பறையின் டைல்ஸ்கள் மற்றும் பாத்திரம் கழுவும் சிங், குழாய்கள் என அனைத்திலும் படிந்துவிடும். இதனை சுத்தம் செய்வது மிகப்பெரிய சவாலான விஷயமாகும். அப்படி சுத்தம் செய்தாலும் ஏதோ ஓரளவிற்கு தான் அந்த உப்பு கறைகள் போகுமே தவிர முழுமையாக சுத்தமாகுவது இல்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நாள்பட்ட கரைகளும் என்ன செய்தாலும் சுத்தமாகுவது இல்லை.
இப்படி சவாலான உப்பு தண்ணீர் கரைகள் மற்றும் நாள்பட்ட கரைகளை ஒரே தூளில் சுத்தம் செய்துவிடலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை எப்படி செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். வீட்டின் கழிப்பறையை எப்படி சுத்தமாக பராமரிக்கலாம் என்று தற்போது காணலாம். இதன் செயல்முறை மிக எளிமையாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் காலாவதியான 3 மாத்திரைகளை இடித்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கப்பில் போட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் டீத்தூள், இரண்டு ஸ்பூன் சோப்பு பௌடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இதனை வீட்டில் இருக்கும் கழிப்பறை, வாஷ் பேசின், குழாய்கள் மற்றும் டைல்ஸ்களில் நன்றாக ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதன் பின்னர், இந்தக் கலவையை தெளித்த இடங்களை முற்றிலும் தேய்த்துக் கழுவலாம். குறிப்பாக, கை வலிக்க தேய்த்துக் கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. லேசாக கழுவினாலே சுத்தமாகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.