/indian-express-tamil/media/media_files/2025/10/08/screenshot-2025-10-08-213811-2025-10-08-21-39-21.jpg)
நம் வீட்டில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றால் அது கால் மிதிதான். நம் வீட்டு வாசலில், பாத்ரூம் வெளியில், சமையலறையில், படுக்கை அறையில் என எல்லா அறைகளிலும் கால் மிதியை நாம் பயன்படுத்தி வருகிறோம். நாம் காலில் இருக்கும் அழுக்குகள் இந்த கால் மிதியில் தான் அதிகம் சேருகின்றன. என்னதான் கால்மிதி நம் வீட்டை சுத்தம் செய்தாலும் அதில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுவோம்.
ஆமாம், கால்மிதியில் படிந்துள்ள நாள்பட்ட அழுக்குகள் அவ்வளவு எளிதில் போவதில்லை. அதற்கு என்று தணியாக லிக்யூட், பிரஸ் என பொருட்கள் சுத்தம் செய்வதற்கு தேவைப்படும். அப்படியே நாம் கை வலிக்க அந்த கால்மிதியை மாங்கு மாங்கு என்று சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் எண்ணெய் கறைகள் போவதற்கு ஒரு தசாப்தம் தேவைப்படும். இதனாலே பலரும் கால்மிதி அழுக்கானதும் அதனை மாற்றிவிட்டு வேறு கால்மிதி வாங்குவார்கள். சிலர் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கை வலிக்க கால் மிதியை சுத்தம் செய்வார்கள்.
நமக்கு பெரும் சவாலாக இருக்கும் கால்மிதியை இனி கை வலிக்க சுத்தம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆமால், இனிமேல் எவ்வளவு அழுக்கு படிந்த கால்மிதியாக இருந்தாலு வெறும் ஒரு மாத்திரையில் சுத்தம் செய்துவிடலாம். அது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
சிம்பிள் டிப்ஸ்
கலாவதியான மாத்திரையை இடிக்கல்லில் வைத்து நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பக்கெட் தண்ணீரில் நாம் பொடி செய்து வைத்த மாத்திரை, பாத்திரம் கழுவும் லிக்யூட் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும். பின்னர் பல நாட்களாக அழுக்கு பிடித்து துவைப்பதற்கு கடினமாக இருக்கு கால் மிதியை அந்த தண்ணீரில் நனைத்து வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு கால் மிதியை எடுத்து பார்த்தல் அதில் இருந்த அழுக்குகள் நீங்கிவிடும். இதனை ஒரு முறை நல்ல தண்ணீரில் அலசி எடுத்தால் கால்மிதி பளிச்சென்று மாறிவிடும். இனி கை வலிக்க கால்மிதியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.