கேஸ் செலவு மிச்சம்... கரிப் பிடித்த பர்னர் பளீச்; வெந்நீருடன் இந்த 2 பொருள் சேருங்க; அந்த மேஜிக் நடக்கும்!

கேஸ் பர்னரை கொஞ்சம் கூட கரை இல்லாமல் ஈஸியாக சுத்தம் செய்ய ஒரு ட்ரிக் இருக்கு. அதற்கு வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் பயன்படுத்தினால் போதும்.

கேஸ் பர்னரை கொஞ்சம் கூட கரை இல்லாமல் ஈஸியாக சுத்தம் செய்ய ஒரு ட்ரிக் இருக்கு. அதற்கு வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் பயன்படுத்தினால் போதும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
gas

கேஸ் ஸ்டவ்வை தொடர்ந்து பயன்படுத்தும் போது, பர்னரின் துளைகளில் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு மற்றும் கரும்படலம் பிடிப்பது இயல்பு. இதனால் சுடரின் அளவு குறைந்து, சீரற்ற முறையில் எரியும். இது சமையல் நேரத்தை அதிகப்படுத்துவதுடன், உங்கள் கேஸ் சிலிண்டர் செலவையும் மறைமுகமாக உயர்த்துகிறது. உங்கள் கரிப் பிடித்த பர்னரை புதிது போல பளபளக்க வைத்து, கேஸ் செலவை மிச்சப்படுத்த உதவும் ஒரு எளிய மற்றும் செலவில்லாத வீட்டு குறிப்பு பற்றி ஃபதூஸ் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

அந்த 2 'மேஜிக்' பொருட்கள் என்னென்ன? 

வெந்நீர் 
ஈனோ அல்லது சமையல் சோடா  
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு 

செய்முறை:  

முதலில் கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டு, இரண்டு அல்லது மூன்று பர்னர்களையும் கழற்றி தனியாக எடுக்கவும். ஒரு ஆழமான பாத்திரத்தில், பர்னர்கள் முழுவதும் மூழ்கும் அளவுக்குக் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றவும். அதில், ஒரு முழு ஈனோ பாக்கெட்டை (அல்லது 2 ஸ்பூன் சமையல் சோடா) சேர்க்கவும்.

இப்போது, 2 ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றை அந்த வெந்நீரில் சேர்க்கவும். இந்த இரண்டு பொருட்களும் வெந்நீருடன் சேரும்போது ஏற்படும் நுரைப்புதான், பர்னரில் ஒட்டியிருக்கும் கரியையும், அழுக்கையும் கரைக்கும் 'மேஜிக்' ஆகும். கழற்றி வைத்த பர்னர்களை உடனடியாக இந்த நுரைக்கும் வெந்நீர்க் கலவையில் மூழ்க வைக்கவும். கரும்படலம் எளிதில் நீங்க, குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் வரை அல்லது இரவு முழுவதும் ஊற வைப்பது மிகவும் நல்லது.

ஊறிய பிறகு, பர்னர்களை வெளியே எடுத்து, ஒரு பழைய பல் துலக்கும் பிரஷ் அல்லது ஸ்க்ரப்பர் உதவியுடன் லேசாகத் தேய்க்கவும். அழுக்குகள் மிகவும் எளிதாக நீங்கி, பர்னர் துளைகள் அடைப்பின்றி சுத்தமாவதைக் காணலாம். சுத்தம் செய்த பர்னர்களை சுத்தமான நீரில் அலசி, ஈரம் இல்லாமல் முழுமையாகக் காய வைக்க வேண்டும். ஈரம் இருக்கும் பர்னரை பயன்படுத்தினால் சுடர் சீராக எரியாது. முற்றிலும் காய்ந்த பின்னரே மீண்டும் கேஸ் ஸ்டவ்வில் பொருத்தி பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

பர்னரில் உள்ள கரும்படலம் நீங்கி, தீப்பிழம்பின் நிறம் நீல நிறமாக சீராக எரியும். சுடர் முழு வீச்சில் வெளிப்படுவதால், சமையல் விரைவாக முடிந்து, கேஸ் பயன்பாடு குறையும். வீட்டுப் பொருட்களைக் கொண்டே சுத்தம் செய்வதால், ஸ்டவ்வின் ஆயுட்காலம் அதிகரிக்கும். இனிமேல், உங்கள் சமையலறையில் கேஸ் ஸ்டவ் பர்னரை பளபளப்பாக வைத்து, கேஸ் செலவையும் குறைத்து, சமையலை வேகமாக்குங்கள். 

Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: