லிக்யூடு ஒண்ணு; பயன் 3... லெமன், மஞ்சள் வச்சு கிச்சன் பளீச்; ஈஸி டிப்ஸ்!

நம் சமையலறையில் உள்ள நாள்பட்ட கறைகளை ஒரு லிக்யூடை வைத்து எப்படி சுலபமாக சுத்தம் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் சமையலறையில் உள்ள நாள்பட்ட கறைகளை ஒரு லிக்யூடை வைத்து எப்படி சுலபமாக சுத்தம் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
life style

வீட்டில் எல்லோரும் முக்கியமாக கவனிக்கும் இடம் சமையலறை தான். சமையலறை என்பது உணவைச் சமைக்கும் இடம் மட்டுமல்ல, அதுதான் வீட்டின் மையப் பகுதி. ஆனால், சமையல் வேலைகளால் ஏற்படும் எண்ணெய்ப் பிசுக்கு, கறைகள், கிருமிகள் ஆகியவற்றால் கிச்சனைச் சுத்தம் செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும். 

Advertisment

என்னதான் நாம் அன்றாடம் சமையலறையை சுத்தம் செய்தாலும் அதில் உள்ள எண்ணெய் கறைகள் விடாப்பிடியாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இப்படி நாள்பட்ட கறைகளை போக்குவதற்கு ஒரு எளிய லிக்யூடு உள்ளது. இந்த லிக்யூடை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.  அரை எலுமிச்சை பழத்தை மூன்று, நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை வடிக்கட்டி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த லிக்யூடை நாம் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். இதை  உங்கள் சமையலறையில் உள்ள டைல்ஸில் அப்ளே செய்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவினால்  எண்ணெய் பிசுக்கு கறைகள், நாள்பட்ட கறைகள் சட்டென மறைந்துவிடும்.

அடுத்ததாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடுப்பில் தினமும் எண்ணெய், குழம்பு போன்றவை கொட்டிவிடும். இதனால், அடுப்பு சுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கு. அதுமட்டுமல்லாமல், சோப்பு, தண்ணீர் கொண்டு அவற்றை சுத்தம் செய்யும் பொழுது நாள் முழுவதும் அடுப்பை சுத்தம் செய்வதிலேயே கழிந்துவிடும். 

Advertisment
Advertisements

இனி இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை. மேல் குறிப்பிட்ட எலுமிச்சை பழம் லிக்யூடை அடுப்பின் மீது ஸ்ப்ரே செய்துவிட்டு ஒரு துணி வைத்து துடைத்து எடுத்தால் அடுப்பு பளிச்சென்று மாறிவிடும். இதனால் உங்கள் நேரமும் மிச்சமாகும்.  நம் வீட்டிற்கு தினமும் கொசுக்களும், கரப்பான் பூச்சிகளும் அழையா விருந்தாளியாக வருவார்கள். இவை பெரும்பாலும் நாம் பாத்திரம் கழுவும் சிங் மூலமாகவே வருகின்றன. 

என்னதான் நீங்கள் சுத்தம் செய்தாலும் சிங்கின் கழிவு நீர் செல்லும் குழாய் வழியே பூச்சிகள் வீட்டிற்குள் வரத் தான் செய்கின்றன. இவை சமையலறை மற்றும் உணவுகள் மீது கூட இருக்கும். இதனால் பல நோய்கள் கூட பரவ வாய்ப்பிருக்கிறது. இப்படி சிங் வழியாக பூச்சிகள் வருவதை தடுக்க இந்த லிக்யூடை சிங்கிற்குள் உற்றிவிட்டால் போதும். பூச்சிகள் பிரச்சனை இருக்காது நீங்களும் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக தூங்கலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: