உங்கள் கிச்சனில் பிடிவாதமான கறைகளை சுத்தம் செய்வதில், நீங்கள் சோர்வாக இருந்தால் எங்களிடம் சில நம்பமுடியாத ஹேக்ஸ் உள்ளன. இது உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பது மட்டுமல்லாமல், முடிவுகளுடன் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
நீங்கள் ரசாயன அடிப்படையிலான கிருமிநாசினிகளை நம்பாமல், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒன்றை முயற்சிக்க விரும்பினால், தீர்வு உங்கள் சமையலறையில் உள்ளது.
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவையானது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் காரத்தன்மையின் நன்மைகளால் நிரம்பியுள்ளது, இது உடனடியாக வேலை செய்யும். உண்மையில், இந்த இரண்டு பொருட்களின் கலவை பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கிரீஸ் மற்றும் கறை நீங்க
சமையலறையின் மேற்பரப்பைச் சுத்தம் செய்த பிறகும், அடுப்பைச் சுற்றி திடமான கிரீஸ் படிவுகளை நீங்கள் அடிக்கடி பார்ப்பீர்கள், இது உங்கள் சமையலறையை அழுக்காக்கும்.
பேக்கிங் சோடாவை ஒரு பேஸ்ட் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து, இந்த பேஸ்ட்டை கிரீஸ் மற்றும் கறை உள்ள மேற்பரப்பில் தடவி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் அவற்றை சிறிது சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் அல்லது துடைக்கவும். இதன் சிறந்த விஷயம் என்னவென்றால், இது மற்ற ரசாயன அடிப்படையிலான ஸ்ப்ரேக்கள் மற்றும் கரைசல்களைப் போல ஆபத்தானது அல்ல.
பாத்திரங்களை சுத்தம் செய்ய

ஆம், பழைய சமையல் பாத்திரங்கள் அல்லது உலோகப் பொருட்களில் உள்ள அழுக்கு மற்றும் கிரீஸை அகற்றுவதற்கான எளிய வழி இதுவாக இருக்கும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, கரைசலைக் கிளறி, உங்கள் கலைப்பொருட்கள் மற்றும் பாத்திரங்களை கரைசலில் நனைக்கவும்.
சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து கழுவவும். வித்தியாசத்தைப் பார்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“